>>
  • இந்திரன் சாபம் நீங்கிய பாகசாலை புரந்தரேஸ்வரர் ஆலயம் – நாகை
  • >>
  • 18-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உங்க மூளை உங்க கண்ட்ரோல்ல இல்லையா? ஜாக்கிரதை
  • >>
  • பாப்பான்குளம் திருவெண்காடர் சிவன் கோவில் – அற்புதத் திருத்தலம்
  • >>
  • 17-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • மூட்டுவலிக்கு எளிய மற்றும் இயற்கையான தீர்வுகள்
  • >>
  • திருநாங்கூர் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில்
  • >>
  • 16-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உலக வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் முதல் 5 சம்பவங்கள் - Part 1
  • >>
  • இந்தியாவில் 7 ரயில் நிலையங்களில் இருந்து வெளிநாடு செல்லும் ரயில்கள் எங்கு அமைந்து உள்ளது என்று தெரியுமா?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 19 ஏப்ரல், 2022

    அயன் பீம் -ஏவுகணைகளை சத்தமில்லாமல் தாக்குமாம்.! உண்மையா? இஸ்ரேல் புதிய சாதனை.!

    தொடர்ந்து பல நாடுகள் அதிநவீன ஆயுதங்களை உருவாக்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் தங்கள் நாட்டின் வான் எல்லைக்குள் நுழையும், ஏவுகணைகளைக் கண்ணுக்கு தெரியமால் சத்தமின்றி வானில் தாக்கும் லேசர் ஆயுத சோதனையை இஸ்ரேல் வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளது. மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

    அதாவது இஸ்ரேல் அணு ஆயுதம் உள்பட பல்வேறு அதிநவீன ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளில் ஒன்று. குறிப்பாக இந்த நாடுஅயன் டோம் எனப்படும் அதிநவீன வான்பாதுகாப்பு ஆயுத அமைப்பையும் கொண்டுள்ளது.

    குறிப்பாக எதிரிநாடுகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை நடுவானில் மிகவும் துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் இந்த அயன் டோம்
    உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இஸ்ரேலுக்கும், காசா முனையில் செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடந்த ஆண்டு
    நடந்த போரில் இந்த அயன் டோம் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடுகள் உலகளவில் பேசுபொருளானது.

    இந்த நிலையில் இஸ்ரேல் தற்போது புதிய வகை ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. அதாவது தங்கள் நாட்டின் வான் எல்லைக்குள் நுழையும் அளில்லா விமானம், ராக்கெட்டுகள், ஏவுகணைகள் போன்றவற்றை கண்ணுக்குகே தெரியாமல் சத்தமின்றி தாக்கும் லேசர் ஆயுத டெக்னாலஜியை, இஸ்ரேல் வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்து.

    குறிப்பாக இஸ்ரேல் இந்த லேசர் அணு ஆயுதத்துக்கு அயர்ன் பீம் என்று பெயரிட்டுள்ளது. மேலும் இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட், இந்த புதிய அயர்ன் பீம் லேசர் வான் பாதுகாப்பு அமைப்பை, இஸ்ரேல் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. அதேபோல் இது அறிவியல் புனைகதைபோல் தோன்றலாம், ஆனால் இது உண்மை எனவும், இந்த அயர்ன் பீம் குறிக்கீடுகள், வான் எல்லைக்குள்நுழையும் ஏவுகணைகள், ராக்கெட்டுகள், டிரோன்கள் போன்றவற்றை சத்தமின்றி துல்லியமாக தாக்கக்கூடியவை எனவும் கூறியுள்ளார்.

    எதிரிகளின் தாக்குல்களிலிருந்து நாட்டை முழுமையாக பாதுகாக்க, அடுத்த பத்தாண்டுகளில் இஸ்ரேலின் எல்லைகளைச் சுற்றி லேசர்அமைப்புகளை பயன்படுத்துவதே இலக்கு என நஃப்தாலி பென்னட் கூறியிருந்தார். மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றைடிவிட்டர் பகத்தில் வெளியிட்டிருந்தார் பென்னட்.




    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக