Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

கிரிவலம் : எந்த கிழமையில் கிரிவலம் சென்றால் என்ன பலன் கிடைக்கும் ?.

கிரிவலம் செல்வதால் (benefits of girivalam) பாவ வினைகள் குறைந்து, புண்ணியங்கள் கூடும். தெய்வ அருள் மட்டுமின்றி சித்த புருஷர்களின் அருளும் கிடைக்கும். இயற்கையின் நல்லருளையும் நம்மால் பெற முடியும். அனைத்து கிழமைகள், அனைத்து திதிகளிலும், எல்லா நேரங்களிலும் கிரிவலம் செல்லலாம் என்றாலும் எந்த கிழமையில், எந்த சமயத்தில் கிரிவலம் சென்றால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

திருவண்ணாமலை கிரிவலம்

கிரிவலம் (girivalam) என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை (tiruvannamalai) தான். திருவண்ணாமலை கிரிவலம் (tiruvannamalai girivalam) தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் (arunachala girivalam) என்றும் சொல்வார்கள். ஆனால் எந்த வகை மலை ஆனாலும் நாம் கிரிவலம் மேற்கொள்ளலாம். திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த அதே பலனை மற்ற மலைகளை வலம் வந்தாலும் பெற முடியும்.


திருவண்ணாமலை தவிர பழநி, திருப்பரங்குன்றம், திண்டுக்கல், ரத்னகிரி, சோளிங்கர், வள்ளிமலை, பர்வதமலை, சென்னிமலை, திருமயம் என இப்படி மலைகள் இருக்கும் பல இடங்களிலும் கிரிவலம் செல்லும் வழக்கம் உள்ளது. எங்கெல்லாம் மலை உள்ளதோ, மலை மீது ஆலயம் உள்ளதோ அதை முழுவதுமாக வலம் வந்து அந்த மலை மீதுள்ள தெய்வத்தை வணங்கினால் கிரிவலம் வந்த முழு பலனையும் அடைய முடியும்.


கிரிவலம் செல்வதால் என்ன பலன்?

கிரிவலம் செல்லும் போது பக்தி பாடல்கள் கேட்டுக் கொண்டு செல்லலாம். நமக்கு அந்த பாடல் தெரியும் என்றால் படிக் கொண்டே செல்லலாம். எதுவும் தெரியவில்லை என்றால் நாமங்களை மட்டுமாவது சொல்லிக் கொண்டு செல்லலாம். சிவ ஆலயம் என்றால் "சிவாய நம", "ஓம் நம சிவாய" என்றும், முருகன் கோவில் என்றால் "ஓம் சரவண பவ" என்றும், அம்பாள் கோவில் என்றால் "ஓம் சக்தி பராசக்தி" என்றும் சொல்லிக் கொண்டு செல்லலாம்.


கிரிவல பலன்கள் :


கிரிவலம் செல்வதால் (benefits of girivalam) பாவ வினைகள் குறைந்து, புண்ணியங்கள் கூடும். தெய்வ அருள் மட்டுமின்றி சித்த புருஷர்களின் அருளும் கிடைக்கும். இயற்கையின் நல்லருளையும் நம்மால் பெற முடியும். அனைத்து கிழமைகள், அனைத்து திதிகளிலும், எல்லா நேரங்களிலும் கிரிவலம் செல்லலாம் என்றாலும் எந்த கிழமையில், எந்த சமயத்தில் கிரிவலம் சென்றால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.


எந்த கிழமையில் கிரிவலம் சென்றால் என்ன பலன்?


ஞாயிற்றுகிழமை - சிவலோக பதவி கிடைக்கும், நோய்கள் நீங்கும்.


திங்கட்கிழமை - பாவ கணக்கு குறைந்து, புண்ணிய கணக்கு மேலோங்கும்.


செவ்வாய்கிழமை - கடன் தீரும், தீவினைகள் போகும், வறுமை நீங்கும், சகல சம்பத்துக்களும் தேடி வரும், கர்ம வினைகள் நீங்கும். என்ன நினைத்து கிரிவலம் செல்கிறோமோ எந்த காரியம் உடனே கைகூடும்.


புதன்கிழமை - கலைகளில் நல்ல வளர்ச்சி கிடைக்கும், மோட்சம் கிட்டும்.


வியாழக்கிழமை - குரு அருள் கிடைக்கும். ஞான சித்தி ஏற்படும். இந்த ஜென்மம் மட்டுமின்றி பல ஜென்ம குருமார்களின் ஆசியும் கிடைக்கும்.


வெள்ளிக்கிழமை - செல்வ நலன் கிடைக்கும். வைகுண்ட பேறு கிடைக்கும். குழந்தை பேறு கிடைக்கும்.


சனிக்கிழமை - பிறவிப் பிணி போகும். வியாபாரத்தில் உச்ச நிலை ஏற்படும். நவகிரக தோஷங்களில் இருந்து நிவர்த்தி கிடைக்கும்.


எந்த திதியில், எந்த நேரத்தில் கிரிவலம் சென்றால் என்ன பலன்?


அஷ்டமி - தீவினைகள் அனைத்தும் நீங்கும்.


பிரம்ம முகூர்த்த வேளை - விரும்பும் சக்திகளை பெறலாம்.


பகல், மாலை வேளை - தனம், தானியம் பெருகும்.


இரவு அல்லது நள்ளிரவு நேரம் - அஷ்டமாசித்திகளையும் பெற முடியும்.


அமாவாசை - அருளை வேண்டுவோர் அமாவாசையிலும், பொருளை வேண்டுவோர் பெளர்ணமியிலும் கிரிவலம் செல்லலாம் என்றொரு வாக்கு உண்டு. அதனால் சிவனின் அருளை மட்டுமே பரிபூரணமாக பெற வேண்டும் என நினைப்பவர்கள் அமாவாசை நாளில் கிரிவலம் செல்லலாம். நினைத்த காரியத்தை நிறைவேற்றி, வெற்றியை தரக்கூடியது அமாவாசையில் செல்லும் கிரிவலம்.


பெளர்ணமி கிரிவலத்திற்கு என்ன பலன்?

பெளர்ணமி - அனைத்து நலன்களையும் தரக் கூடியது பெளர்ணமி கிரிவலம். எதை நினைத்து செல்கிறோமோ அதை நிறைவேற்றி, அத்தனை நலன்களையும் தரக் கூடியது.


வாழ்நாளில் ஒருமுறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வேண்டியது அனைத்தையும் இறைவன் நிறைவேற்றி தருவார். வறுமையின் பிடியில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் மிக உயர்ந்து நிலைக்கு செல்ல முடியும். ஞானம், செல்வம், வாழ்க்கை என அனைத்திலும் உயர்வை தரக்கூடியது கிரிவலம். அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்தி கிரிவலத்திற்கு உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக