Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 9 நவம்பர், 2018

கந்தசஷ்டி ஸ்பெஷல் : இன்று முதல் சூரசம்ஹார சுவாரஸ்ய தொடர் !! சூரசம்ஹாரம் !!




இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் படைப்பவரான பிரம்ம தேவரின் புத்திரர்களில் ஒருவர் காசிபர். அவர் சிவபெருமானை நோக்கி கடுமையாக தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றவர். ஒரு சமயம் தேவர்கள் யாவரும் வலிமை இழந்து இருந்த காலத்தில் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் அசுரர்களின் வளர்ச்சிக்காகவும், அவர்களின் சக்திகளை அதிகரிக்கும் பொருட்டும் காசிபரின் தவ வலிமையால் அசுர குலம் தழைக்கும் பொருட்டு ஒரு திட்டம் செய்தார்.

தனது திட்டத்தை செயல்படுத்த அசுர குலத்தை சேர்ந்த அசுரேந்திரன் மற்றும் மங்களகேசினியின் தம்பதியருக்கு புதல்வியாக பிறந்த சுரஸையைத் தேர்ந்தெடுத்து அவளுக்கு தான் கற்ற பல மாய கலைகளையும் கற்று தந்தார் சுக்கிராச்சாரியார். கலைகளை கற்றுத்தேர்ந்த சுரஸையை பலவாறு சோதித்தார். சுக்கிராச்சாரியாரின் பல கடினமான செயல்களில் அகப்படாமல் தான் கற்ற கலைகளை கொண்டு வெற்றி கொண்டாள் சுரஸை. அவளின் சாதுர்யமான அறிவையும், செயல்திறனையும் கண்ட சுக்கிராச்சாரியார் இன்று முதல் மாயா என்று அழைக்கப்படுவாய் என்றும், பின்பு தனது மனதில் திட்டமிட்டு இருந்த எண்ணத்தை பற்றியும் கூறினார்.

மாயாவிடம், அசுர குல தேவர்கள் வலிமையும், அழிவுமின்றி இருக்க வேண்டும் என்பதே உன் தந்தையான அசுரேந்திரனின் ஆசையும், எண்ணமும் ஆகும். ஆனால், அசுர குலத்தை சேர்ந்தவர்களோ தேவர்களால் தொடர்ந்து அழிக்கப்படுகிறார்கள். நம் குலத்தை சார்ந்தவர்களின் அழிவைத் தடுக்க இயலக்கூடிய வாய்ப்பு இப்பொழுது உனக்கு உள்ளது. நீ முயன்று அதில் வெற்றி பெற்று விட்டால் தேவர்களை நாம் அடக்கி நமது அதிகாரத்தையும், ஆட்சியையும் ஈரேழு உலகிலும் நிலைநாட்ட இயலும் என்றார்.


இப்புத்தகத்தை உடனே வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள் !
இதை கேட்டு ஆச்சரியம் மற்றும் அதே சமயம் மகிழ்ச்சியும் அடைந்த மாயா, அசுர குலம் தழைக்க நான் என்ன செய்ய வேண்டும்? குருவே... என்று சுக்கிராச்சாரியாரிடம் கேட்டார். அதற்கு அவர் தன் மனதில் இருந்த திட்டத்தை மாயா அறிந்து கொள்ளும் விதமாக விளக்கினார். பின்பு குருநாதரின் ஆணையை ஏற்று மாயா தன் தந்தையான அசுரேந்திரனிடம் தனது குருவின் திட்டத்தை பற்றி கூற அசுரேந்திரரும் அகமகிழ்ந்து தனது மகளை வாழ்த்தி அனுப்பினார்.

சுக்கிராச்சாரியாரின் திட்டம் என்பது காசிபரை, மாயா மயக்கி அவரின் மூலம் மிகச்சிறந்த வலிமை மிகுந்த அசுர வீரர்கள் பலரை உருவாக்க வேண்டும் என்பதாகும். மாயா தனது மாய சக்திகளால் ஒரு புதிய மாளிகைகளையும், எழில் மிகுந்த நந்தவனத்தையும் காசிபர் இருந்த கானகத்தில் எழுப்பினாள். பின்பு காசிபரின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தாள். அவள் எதிர்பார்த்தபடியே காசிபரும் அங்கு வந்தார். பின்பு, மாயா தான் கற்ற மாய சக்திகளால் காசிபரை மயக்கினாள். இதனால் காசிபர் தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தார்.

காசிபரும், மாயையும் முதலாம் பொழுதில் மானுட உருவத்தில் இணைந்ததால் மானுட தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம் பொழுதில் சிங்க உருவில் இருவரும் இணைந்ததால் சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் பொழுதில் யானை உருவில் இணைந்ததால் யானை முகத்துடன் கூடிய தாரகனும், நான்காம் பொழுதில் ஆட்டின் உருவத்தில் இருவரும் இணைந்ததால் ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். இவர்களின் இணைவின்போது வெளிப்பட்ட வியர்வை மூலம் ஆயிரக்கணக்கான அசுர வீரர்கள் உருவாகினர்.

தொடரும்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக