இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..இப்பொழுதே இணைந்துகொள்
காசு கொடுக்காமல் ஓசியிலேயே கிடைப்பதால் ஆக்சிஜன் தேவையை
பற்றி என்ன சார் கவலை…இப்போ கிடைக்குதல்ல சிரமப்படுகிறபொழுது
பார்த்துக்கொள்ளலாம்…விடுங்க.சார்…என்பவர்களுக்குதான் முக்கியமாக தெரியவேண்டிய விசயம் இது..
இதுவரை எப்படியோ.. இனிமேலாவது வீட்டை சுற்றி இருக்கிற மரத்தையாவது இனி வெட்டாமல்இருப்பீர்கள் அல்லவா…?
சராசரியாக ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நாளைக்கு 53 லிட்டர் ஆக்சிஜன் கண்டிப்பாக தேவை …..ஒருமரத்தில் உள்ள இலையானது 5 மிலிலிட்டர் அளவிற்கு ஆக்சிஜனை வெளிவிடுகிறது. உங்கள் வீட்டில் 4பேர் இருக்கிறீர்கள் என்றால் குறைந்த பட்சம் உங்களுக்கு தேவையான ஆக்சிஜனை தர , ஒரு மரமாவது (50000 இலைகள் ….. முடிந்தவர்கள் எண்ணிப்பார்த்துக்கொள்வதும் தப்பில்லை…..??!! )
காற்றிலே ஆக்சிஜன் இருக்கிறது என்றாலும் , கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஜன், மூக்குமுட்டும் தூசுகள், இரசாயன வாயுக்கள், மூக்கை முட்டும் கார்ப்பொரேசன் பஸ் கரும்புகை…… என்று”அமிர்தத்தில் அசிங்கத்தை” கலந்ததுமாதிரி காற்று கெட்டுக்கொண்டிருப்பதால் , குறைந்தபட்சம் ஒருமரத்தையாவது உங்கள் வீட்டுக்கு அருகில் வளர்த்தீர்கள் என்றால் கார்பன் டை ஆக்சைடு முதற்கொண்டுசகலத்தையும் வடிகட்டி போனசாக ஆக்சிஜனையும் சேர்த்து தருவதால் , உங்கள் நுரையீரலுக்கு ஒருஅருமையான நண்பரை சேர்த்துவைத்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்…..
மூங்கிலும், துளசியும் இன்னும் விசேசம்… ஆக்சிஜனை அதிகமாக வெளியிடுவதில் ( துளசி பகலில்மட்டுமல்ல.. இரவிலும் கூட ஆக்சிஜனை வெளியிடுகிறது) அதிகமாக இவைகளை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்…. வீட்டுக்குள்ளே கூட, இவற்றில் சில ரகங்களை நீங்கள்வளர்த்தலாம்….
ஆக்சிஜன் நிலையத்தினை தேடி ஓடப்போகிற எதிர்காலத்தில் வீட்டிலேயே செலவில்லாமல் ஆக்சிஜனைஉற்பத்தி செய்துகொள்ளலாமே…? ” எங்கள் வீட்டுதோட்டத்தில் நாங்களே உற்பத்தி செய்த ஆக்சிஜனைதான் சுவாசிக்கிறோமாக்கும்” என்று காலரையும் உயர்த்திக்கொள்ளலாம்… !!!?
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக