Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 16 ஜூலை, 2019

அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்-விழுப்புரம்.

 Image result for அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்-விழுப்புரம்.

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


மூலவர் : ரங்கநாத பெருமாள்.

தல விருட்சம் : புன்னாக மரம் உள்ளது.

பழமை : 1000 - 2000 வருடங்களுக்கு முன்பு.

ஊர் : ஆதி திருவரங்கம்.

மாவட்டம் : விழுப்புரம்.

தல வரலாறு :

முன்னொரு காலத்தில் சந்திரன் தனது மனைவிகளின் சாபத்தினால் கலைகள் குறைந்து ஒளி மங்கி பொலிவு இழந்து வருந்தினான். பின்பு தேவர்களின் அறிவுரையின் படி இத்தலம் வந்து பெருமாளை வணங்கி தனது குறைகள் நீங்கப்பெற்றான்.

தென்கிழக்கிலுள்ள தீர்த்தத்தில் நீராடி தவம் செய்ததால் இந்த தீர்த்தத்திற்கு சந்திர புஷ்கரணி என்ற பெயர் உண்டாயிற்று. சிறிது காலம் சென்ற பின் தேவர்கள் மீண்டும் பெருமாளை இதே இடத்தில் எப்பொழுதும் எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்ட, பெருமாளும் கருணைகூர்ந்து தேவ தச்சன் விஸ்வகர்மாவை அழைத்து தன்னைப்போலவே ஒரு விக்ரகத்தை நியமிக்கும்படி கூறினார்.

தேவதச்சனும் மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாளை வடிவமைத்து ஒரு ஆலயத்தை நிர்ணயித்து அதில் பிரதிஷ்டை செய்து விட்டார். பெருமாளும் தேவர்களுடைய வேண்டுகோளின் படி இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தல பெருமை :

தமிழ்நாட்டிலேயே மிக மிகப் பெரிய பெருமாளில் இவரும் ஒருவர் ஆவார். இவர் ஸ்ரீ ரங்கத்தில் உள்ள ரங்கநாத பெருமானை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் பெரிய பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :

கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வேண்டுகிறார்கள். நேர்த்திக் கடனாக பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

திருவிழா :

புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும் பவுர்ணமிகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும் வைகுண்ட ஏகாதசி நாளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

திறக்கும் நேரம்:

இத்தலம் காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி :

அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் கோவில்,
ஆதி திருவரங்கம் - 605 802,
விழுப்புரம் மாவட்டம்.
போன் -   91 - 4153 - 293 677

செல்லும் வழி :

விழுப்புரம் மாவட்டத்தின் அருகேயுள்ள திருக்கோவிலூரிலிருந்து 16 கி.மீ தொலைவில் ஆதி திருவரங்கம் கோவில் அமைந்துள்ளது. திருக்கோவிலூரிலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக