>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

    கோமுகாசனம்


    Image result for கோமுகாசனம் 



    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    கோ என்றால் 'பசு' என்று பொருள். முக என்றால் 'முகம்'. அதாவது பசுவின் தோற்றத்தை ஒத்து இருப்பதால் இதற்கு கோமுகாசனம் என்று பெயர்.

    செய்முறை:
    •  முதலில் தரையில் கால்களை நீட்டி நிமிர்ந்து உட்காரவும்.
    •  முதுகுப்பகுதியானது நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும். வளைந்து    இருக்க கூடாது.
    • பின்னர், வலது காலை மடித்து இடது தொடையின் வெளிப்பக்கம் வைக்க வேண்டும். பாதமானது தரையை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
    •  பின்னர், இடது காலை மடித்து வலது புட்டத்திற்கு கீழே வைத்து, அதன் மீது உட்கார வேண்டும்.
    •  பின்னர், இடது கையை மடித்து நடு முதுகில் வைக்கவும். இப்பொழுது வலது கையை தலைக்கு மேலே உயர்த்தி பின் முதுகுப் பக்கம் வளைக்கவும்.
    •  இப்பொழுது இடது கை விரல்களோடு, வலது கை விரல்களை கோர்த்து பிடித்துக்கொள்ள வேண்டும்.
    •  முதுகுப்பகுதி நிமிர்ந்து இருக்க, இடது கையை மேல் நோக்கியும் வலது கையை கீழ் நோக்கியும் பிடியை தளர்த்தாமல் பிடித்திருக்க வேண்டும்.
    •  சுவாசமானது இயல்பாக இருக்க வேண்டும். இதே நிலையில் குறைந்தது அரை நிமிடம் வரை இருக்கவும்.
    •  கழுத்தையும், தலையையும் சாய்க்காமல் நேராக வைத்து, நேராக பார்க்க வேண்டும்.
    •  பின்னர், மெதுவாக கைகளை தளர்த்தி இயல்பான நிலைக்கு வர வேண்டும்.
    •  இதே போல, கால்களையும் கைகளையும் மாற்றி மீண்டும் செய்யவும்.
    பலன்கள்:
    •  மார்புப்பகுதி நன்றாக விரிவடைவதால் நல்ல தோற்றத்தை கொடுக்கிறது.
    •  தொடர்ந்து செய்த்து வர கூனல் முதுகு நேராகிறது.
    •  கால் சுளுக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
    •  முழங்கால் மூட்டுகளில் தோன்றும் இறுக்கத்தை போக்கி நிவாரணம் கிடைக்கிறது.
    • தோள்மூட்டு, மற்றும் கழுத்துப் பகுதிகளில் தோன்றும் தசைப்பிடிப்பை போக்குகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக