Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 26 செப்டம்பர், 2019

லேண்டரில் உண்மையில் என்ன தவறு நிகழ்ந்தது?- இஸ்ரோ தலைவர் சிவன் பதில்!

 

 

 

 

 



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 

சந்திரயான் - 2 செயற்கைக்கோள் மூலம் அனுப்பப்பட்ட லேண்டரில் என்ன தவறு நிகழ்ந்தது என்ற கேள்விக்குச் சிவன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

லேண்டரில் உண்மையில் என்ன தவறு நிகழ்ந்தது?- இஸ்ரோ தலைவர் சிவன் பதில்!
ஹைலைட்ஸ்
  • விக்ரம் லேண்டரில் என்ன நடந்தது?
  • ஏன் சிக்னல் தரவில்லை? - கே.சிவன் பதில்
பூமியின் துணைக்கோளாக உள்ள நிலவில் கால்தடம் பதிக்க பல்வேறு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதையொட்டி அங்குள்ள நிலப்பரப்பு, கனிம வளங்கள், நீர் இருப்பதற்கான வாய்ப்பு, உயிர் வாழ சாத்தியக் கூறுகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஏராளமான செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக ’சந்திரயான் 2’ விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம், கடந்த ஜூலை 22ல் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. முதலில் பூமியின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து பூமியின் சுற்று வட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது.

கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதையில் விண்கலம் நுழைந்தது. பின்னர் செப்டம்பர் 2ஆம் தேதி நிலவிற்கு அருகில் வந்த போது, சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகப் பிரிந்தது. அதேசமயம் விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதி நிலவை 100 கி.மீ தொலைவில் தொடர்ந்து சுற்றி வருமாறு இயக்கப்பட்டது. இது ஓராண்டிற்கு நிலவைப் புகைப்படங்கள் எடுத்து, தரைக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும்.

இந்த சூழலில் செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்க முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் நிலவிலிருந்து 2.1 கி.மீ தூரத்தில் இருக்கும் போது, லேண்டரில் இருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சிக்னல் துண்டிக்கப்பட்டதால் நிலவில் லேண்டர் விழுந்திருக்குமோ என்று ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

ISRO Chief K Sivan: Maybe after the committees submits the report, we'll work on the future plan. Necessary approva… https://t.co/KdJOQHeElN
— ANI (@ANI) 1569483913000

இந்நிலையில் நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் ஆனது, லேண்டரை புகைப்படம் எடுத்தது. இதன்மூலம் நிலவின் தரையில் விழுந்து கிடப்பது தெரியவந்தது. ஆனால் அதிலிருந்து சிக்னல் எதுவும் வரவில்லை. இதற்காகத் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் எந்தவித பலனும் இல்லை. இந்த சூழலில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சந்திரயான் 2 ஆர்பிட்டர் நன்றாக வேலை செய்து வருகிறது. அதனுடைய அனைத்து இயக்கங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்யத் தேசிய அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் லேண்டரில் என்ன பிரச்சினை என்று ஆய்வு செய்து தகவல் தெரிவிப்பர்.

அதன் அடிப்படையில் எதிர்காலத்திற்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்படும். இதற்காக உரிய அனுமதி பெற வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் என்று சிவன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!