Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 21 செப்டம்பர், 2019

பொது இடங்களில் காதல் செய்யும் ஜோடிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை..!!!

பொது இடங்களில் காதல் செய்யும் ஜோடிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை..!!!  


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



இந்தோனிசியா நாட்டில் பொது இடங்களில் ஆனும் பெண்ணும் அத்துமீறி முகம் சுழிக்கும் வகையில் நடந்துக் கொள்வது கடுமையான குற்றம் என்று கூறப்படுகிறது.
அதன்படி, பொது இடங்களில் மூன்று காதல் ஜோடியினர் பாலியல் இச்சையில் ஈடுபட்டதாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
புகாரைத் தொடர்ந்து, அந்த மூன்று காதல் ஜோடிகளையும் மசூதி முன்பாக நிற்க வைத்து தலா 20 முதல் 22 சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.
இது அனைத்தும், மக்கள் முன்னிலையிலேயே நடந்துள்ளது. இதில் பெண் ஒருவர் வலி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்ததாக, அங்குள்ள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனை அங்குவந்த சுற்றுலாப் பயணிகளும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. பொதுவெளியில் பிரம்படி கொடுப்பது கொடூரமான சித்ரவதை என்று பலர் கண்டித்துள்ளனர்.
உலகில் அதிகளவில் முஸ்லீம் மக்கள் வசிக்கும் பெரும்பான்மை நாடான இந்தோனேசியாவில், அசே பகுதியில் மட்டும்தான், ஷரியத் இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சூதாட்டம், மதுபோதை, தன்பாலின ஈர்ப்பு, திருமணத்துக்கு முந்தைய உறவு உள்ளிட்ட குற்றங்களுக்கு, சுமத்ரா உள்ளிட்ட பகுதிகளில் கசையடி தண்டனை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!