>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 14 அக்டோபர், 2019

    இனி ரூ. 2,000 இல்லை; அச்சிடுவதை நிறுத்தியதாக ரிசர்வ் வங்கி ஒப்புதல்!!

     


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    நாட்டில் அதிக மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டு அச்சிடுவதை பாரதிய ரிசர்வ் வங்கியின் முத்ரா பிரைவேட் லிமிடெட் நடப்பாண்டில் நிறுத்தி இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


    சில நாட்களாகவே ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டு கிடைக்காது என்ற செய்தி வெளியாகி வரும் நிலையில், இனி 2000 ரூபாய் நோட்டு அச்சிடப்பட மாட்டாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவலை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை பெற்றுள்ளது.

    இதனால்தான் கடந்த சில நாட்களாகவே பல ஏடிஎம்களில் குறைந்த அளவிற்கே 2000 ரூபாய் நோட்டு கிடைத்து வந்தது. இதனால் மக்களுக்கு சந்தேகமும் எழுந்தது. இந்த நிலையில்தான், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவலும் பெறப்பட்டுள்ளது.

    அதிக மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டு அச்சிடுவது குறைக்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்படுகிறது. இதற்குக் காரணமே அதிக அளவில் இந்த நோட்டு பதுக்கப்படுவதை தடுப்பது மற்றும் கறுப்புப் பண நடமாட்டத்தை ஒழிப்பதாகும்.

    இதுகுறித்து பொருளாதார நிபுணர் நிதின் தேசாய் இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்து இருக்கும் பேட்டியில், ''பண மதிப்பிழப்பு செய்வதை விட, புழகத்தில் இருந்து பணத்தை வாபஸ் பெறுவது சிறந்தது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இதைத்தான் செய்துள்ளன'' என்று தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு கறுப்புப் பணத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக ஆன் லைன் பண பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில், 2000 ரூபாய் நோட்டு அச்சிடுவது நிறுத்தப்பட்டு இருப்பதும் ஆன் லைன் பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பதாக அமையும் என்று மற்றொரு பொருளாதார வல்லுனரான ஷெர் சிங் தெரிவித்துள்ளார்.

     
    2016, நவம்பரில் 500, 1000ரூபாய் நோட்டுக்களை தடை செய்யப்பட்டு 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் விடப்பட்டது. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் கேட்டு இருந்த கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்திருக்கும் பதிலில், ''2016-2017ஆம் ஆண்டுகளில் 3,542.991 மில்லியன் அளவிற்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டன. இதுவே 2017-2018 ஆம் ஆண்டுகளில் 111.507 மில்லியனாக குறைந்தது. பின்னர் 2018-2019ஆம் ஆண்டுகளில் இது 46.690 மில்லியன் நோட்டுகளாக குறைந்தது'' என்று தெரிய வந்துள்ளது.

    கடத்தலுக்கு 2000 ரூபாய் எளிதாக பயன்படும் என்பதாலும் இந்த நோட்டுக்கள் அதிகமாக புழக்கத்தில் இருப்பதை அரசும் விரும்பவில்லை. கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் ரூ. 6 கோடி அளவிற்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    நடப்பாண்டின் துவக்கத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதை மத்திய அரசு மறுத்து வந்தது. அது தற்போது உண்மை ஆகியுள்ளது.

    இதையும் மீறி சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளியியல் விவரத்தில், ''2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் குறைந்து இருப்பது தெளிவானது. 2018, மார்ச் மாத இறுதி வரை 3,363 மில்லியன் அளவிற்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. மொத்த புழக்கத்தில் 3.3% சதவீதம் குறைந்து, மதிப்பளவில் 37.3% சதவீதம் குறைந்துள்ளது.

    இதுவே 2019ஆம் ஆண்டில் 3,291 மில்லியன்களாக குறைந்துள்ளது. பணப் புழக்கத்தில் 3% சதவீதம் குறைந்து, மதிப்பளவில் 31.2% சதவீதம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக