Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 16 அக்டோபர், 2019

ஆடையில்லா கடற்கரை! கேரளாவுல என்னவெல்லாம் பண்ணலாம் தெரியுமா?

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கேரளாவுக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகளே, கேரளாவில் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பன பற்றிய தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழகம் மற்றும் தென் கர்நாடகத்தில் இருக்கும் மக்களுக்கு மிகவும் சுற்றுலா என்றவுடன் எத்தனை இடங்கள் மனதுக்கு வந்தாலும், கேரளா என்றவுடன் நினைவுக்கு வருவது அங்குள்ள மலை வாழிடங்களும், கடற்கரை மற்றும் உப்பங்கழி காயல்களும்தான்.

கடவுளின் சொந்த தேசம் என்று அழைக்கப்படும் அழகிய கேரள தேசத்துக்கு பயணம் செய்பவர்கள் சில முக்கிய விசயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அவற்றை தெரிந்து கொண்ட பின்னரே கேரளத்துக்கு பயணிப்பதை பற்றி சிந்திக்கவேண்டும் என்கிறது கேரள மாநிலத்தின் சுற்றுலா இணைய தளம். அட அப்படி என்னதான் சொல்றாங்கன்னு போயி பாத்தா, கேரளத்துக்கு பயணம் செய்பவர்கள் மனதில் கொள்ள வேண்டிய விசயங்கள்னு சில குறிப்புகளையும் எழுதி வச்சிருக்காங்க.. அவை என்னல்லாம்னுதான் இந்த பதிவுல நாம பாக்கப்போறோம்.

1 வானிலை

கேரளத்தின் வானிலையை நிச்சயம் மனதில் கொள்ள வேண்டும். வருடத்தின் குறிப்பிட்ட நான்கு மாதங்கள் மிக பலத்த மழை பெய்யும். இதனால் சுற்றுலா பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டியது மழைக் காலத்தைப் பற்றி...

கேரளத்தின் மொத்த பகுதிகளும் மழையால் குளிரும் காலம் ஜூனில் தொடங்கும்.

ஜூன்
ஜூலை
ஆகஸ்ட்
செப்டம்பர்

இந்த நான்கு மாதங்களும் அளவுக்கு சற்று அதிகமாகவே மழை பெய்யுமாம். இதனால் மழைக்காலத்தை கவனத்தில் கொண்டு சுற்றுலாவுக்கு வரவேண்டும்.


2 பாதுகாப்பு உபகரணங்கள்


மழைக் காலம் என்றாலும் ஜூன் தொடங்கும் போது சுற்றுலா வருபவர்கள் மிக பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

குடை, கம்பளி ஆடைகள், குளிர் போக்கும் ஆடைகள் உள்ளிட்டவற்றை சுற்றுலாப் பயணிகள் மறவாது எடுத்து வருவது சிறந்தது. அப்படி ஒரு வேளை மறந்தாலும் நீங்கள் சுற்றுலாவின் போது நிச்சயமாக வாங்கி வைத்துக் கொள்வது சிறந்ததாகும்.

3 பணம். பரிவர்த்தனைகள்

கேரளத்துக்கு சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் கொண்டு வரும் பணத்துக்கு எந்த வரம்பும் இல்லை.

வங்கிகள் மற்ற இந்திய நகரங்களைப் போலவே காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை செயல்படும். முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளிலும் வங்கி செயல்படும்.


4 வருகை தருவதற்கான சிறந்த நேரம்

முன்னரே கூறியவாறு கேரளத்துக்கு செல்லும்போது மழைக் காலத்தைப் பற்றி தெரிந்து கொண்டு செல்லவேண்டும்.

ஜூன்
ஜூலை
ஆகஸ்ட்

ஆகிய மாதங்களில் அதிக அளவு மழை இருக்கும். தமிழகத்தில் இந்த சமயத்தில் வெய்யில் வெளுத்து வாங்கும். இதனால் பல தமிழக சுற்றுலா பயணிகள் கேரளத்துக்கு சுற்றுலா செல்வது வாடிக்கை.


5 டிராவல் கிட்

நீங்கள் பயணத்தைத் தொடங்கும்போது முன்னரே பல விசயங்களைத் திட்டமிட்டு உங்களுக்குத் தேவையானவற்றை உடன் எடுத்துச் செல்லவேண்டும்.

அவற்றில் முக்கியமாக பருத்தி உடைகள், தொப்பிகள், சன் கிளாஸ்கள், சன்ஸ்கிரீன் லோஷன் ஆகியவை அடங்கும்.

மழைக் காலங்களில் கொசு உள்ளிட்ட பூச்சிகளின் தொல்லைகளும், வெய்யில் காலங்களில் சூரியனிலிருந்து காத்துக்கொள்ளவும் தேவைப் படலாம்..



6 கூடவே கூடாதவை

கேரளத்தில் மிக கடுமையாக கடைப் பிடிக்கப்படும் முக்கியமான சட்டம் போதை மருந்துகள் தடுப்பு சட்டம். மற்ற மாநிலங்களிலும் இந்த சட்டம் இருக்கிறது என்றாலும்கூட கேரளத்திலும் இது மிகக் கடுமையாக கடைப் பிடிக்கப்படுகிறது.

போதை மருந்துகள் வைத்திருந்து பிடிபட்டாலோ, போதை மருந்துகள் உபயோகித்தாலோ கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என கேரள சுற்றுலாத் துறை இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ளது கேரள அரசு.


7 ஆயுர்வேதம்

சுற்றுலாத் துறை அங்கீரித்த ஆயுர்வேத நிலையங்கள் மற்றும் ஆயுர் வேத மையங்களுக்கு மட்டுமே செல்ல அறிவுறுத்தப் படுகிறார்கள் சுற்றுலாப் பயணிகள்.

ஆலப்புழா
எர்ணாகுளம்
இடுக்கி
கண்ணூர்
காசர்கோடு
கொல்லம்
கோழிக்கோடு
கோட்டயம்
மலப்புரம்
பாலக்காடு
பத்தனம்திட்டா
திருவனந்தபுரம்
திருச்சூர்
வயநாடு

என மாவட்ட வாரியாக அமைந்துள்ள அரசால் அங்கீகரிக்கப் பட்ட ஆயுர் வேத நிலையங்கள் அல்லது மையங்கள் பற்றிய விவரங்களை கேரள அரசில் சுற்றுலாத் துறை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளமுடியும்.



8 உணவு

காண்டிநென்டல், சைனீஸ், இந்திய மற்றும் கேரள சிறப்பு உணவுகள் என பல தரப்பட்ட உணவுகள் கேரளத்தின் சுற்றுலாத் தளங்கள் பலவற்றில் நீங்கள் உண்ணலாம்.

சுகாதாரமற்ற நிலையில் சாலை ஓரங்களில் விற்கப் படும் முறையற்ற கடைகளில் சுற்றுலாப் பயணிகள் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உணவை பரிசோதித்து அதற்கு அரசு அனுமதியுடன் கடை நடத்தி, விற்கப் படும் உணவுப் பொருள்களை மட்டும் சுற்றுலாப் பயணிகள் தாராளமாக சாப்பிட்டு மகிழலாம்.


9 ஆடையில்லா கடற்கரை

கேரளத்தில் இருக்கும் எந்த கடற்கரைகளிலும் ஆடை இல்லாமல் இருக்கு அனுமதி இல்லை. சில தனியார் இணைய தளங்களில் ஆடையில்லா கடற்கரை என விளம்பரப் படுத்தப் படுகிறது. இது சட்டப் படி தவறானது. கேரளத்தின் எந்த ஒரு பொது வெளியிலும் ஆடை இல்லாமல் இருப்பது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக அமையும்
.


10 வனவிலங்கு சரணாலயங்கள்

வன விலங்கு சரணாலயங்களுக்கு செல்ல சரணாலய அதிகாரியிடம் முன் அனுமதி வாங்க வேண்டும்.

வன விலங்கு அதிகாரிகளிடம் அனுமதி இல்லாமல் காடுகளுக்குள் நுழைவது சட்டப் படி குற்றம். அதை ஒரு போதும் சுற்றுலாப் பயணிகள் செய்யக் கூடாது.

காடுகள் பாதுகாப்பு அரசு துறையின் இணையதளம்

www.forest.kerala.gov.in

கேரள அரசின் அதிகாரப் பூர் இணைய தளம்

www.kerala.gov.in

கேரள சுற்றுலாத் துறையின் அதிகாரப் பூர்வ வலைத் தளம்

https://www.keralatourism.org



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக