Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 9 அக்டோபர், 2019

தந்தையின் நச்சரிப்பு..!

Image result for தந்தையின் நச்சரிப்பு..!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




தந்தையின் நச்சரிப்பால் சிவாவிற்கு வீட்டில் இருக்கவே பிடிக்காமல் போனது. ஏனென்றால், சிவாவின் தந்தை பேஃனை ஆப் பண்ணாமல் எங்கே வெளியே போகிறாய், ஆளில்லாத அறையில் டி.வி. ஓடுகிறது பார், பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார் என்று இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.

வேலை இல்லாமல் வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் சிவா தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. ஒருநாள் சிவாவிற்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்போதுதான் அப்பாவின் நச்சரிப்பு குறையும் என்று எண்ணிக் கொண்டான்.

பிறகு நேர்காணலுக்கு கிளம்பினான். கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல், தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா. நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்த முகவரிக்கு சிவா வந்து சேர்ந்தான்.

அங்கு நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் அவனை வரவேற்றன. தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக குழாயை அப்படியே விட்டுப் போயிருந்தார். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக் கொண்டிருந்தது. அந்த குழாயை கையில் எடுத்து செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.

உள்ளே வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள். மெதுவாக மாடிப்படியில் ஏறினான். அங்கு இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது. விளக்கை அணைக்காமல் செல்கிறாயே? என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.

மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த சிவாவிற்கு ஒரே திகைப்பு. நமக்கு இங்கு வேலை கிடைக்குமா? என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது. பதற்றத்துடன் ஹாலில் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் வெல்கம் என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான். அதையும் வருத்தத்துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.

ஹாலில் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் வீணாக சுற்றிக் கொண்டிருந்தன. யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி ஓடுகிறது? என்ற அப்பாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் அமர்ந்தான்.

சிவா கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான். உடனே நீங்கள் எப்போது வேலைக்கு சேருகிறீர்கள்? என்று கேட்டார். இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக்கூர்மை கேள்வியா, இல்லை வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல் குழம்பி நின்றான்.

கேள்வி பதிலில் ஒருவனின் மேலாண்மையை தெரிந்து கொள்வது கடினம். அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம். இங்கு வந்த எந்த இளைஞருமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள். நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம் என்றார்.

அப்பாவின் பேச்சு எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். ஆனால், அந்த ஒழுங்குமுறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்பாவின் மீதுள்ள எரிச்சல் இப்போது சுத்தமாக தணிந்தது. வேலைக்குச் செல்லும் இடத்திற்கு அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சிவா சந்தோஷமாக வீடு திரும்பினான்.

நாம் அழகிய சிலையாக உருவாக நமக்குள் இருக்கும் வேண்டாத சில தீய குணங்களை கண்டிப்பால், தண்டிப்பால், உளி போன்று வார்த்தைகளால், கட்டுப்படுத்துவதால் தான், சில நேரம் வில்லனாக நமக்கு தெரிகிறார் தந்தை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக