Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 9 அக்டோபர், 2019

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேனி

Image result for வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேனி
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




தீராத நோய் தீர்க்கும் அற்புதசக்தியாகவே பக்தர்கள் வணங்கி வரும் உமாதேவி அம்சம் பெற்ற கௌமாரியம்மன் தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் இருக்கிறாள்.

 அம்மன் : கௌமாரியம்மன்

 தல விருச்சம் : கொம்புடன் கூடிய பால் வடியும் அந்தி மரம்

 தீர்த்தம் : கிணற்று நீர், முல்லை ஆற்று நீர்

 புராணப் பெயர்: அளநாடு

துணைக் கோவில்கள் : வீரபாண்டி செல்லாண்டியம்மன் மற்றும் கண்ணீசுவரமுடையார் கோவில்

தல வரலாறு :

ஆதிகாலத்தில் ஒரு அசுரனை வெல்வதற்காக உமாதேவி அம்சம் பெற்ற கௌமாரியம்மன் இன்றைய தலம் இருக்கும் அடர்ந்த வனத்தில் தவமியற்றினார். அசுரன் கௌமாரியை தூக்கிச் செல்ல முயன்றான். இதனை அறிந்த கௌமாரி, பக்கத்தில் இருந்த அருகம்புல்லை எடுத்து அசுரன் மீது வீச, அது அசுரனை இரு கூறாக பிரித்து அழித்தார். அப்போது தேவர்கள் மலர்மாறி தூவ கௌமாரி இங்கேயே கன்னித்தெய்வமானார். அவர் வழிபட்ட சிவலிங்கத்திற்கு திருக்கண்ணீஸ்வரர் என பெயர் இட்டார்.

தல பெருமை :

வீரபாண்டிய மன்னன் மதுரையில் ஆட்சி நடத்திய போது, ஊழ்வினையால் இரண்டு கண்களும் ஒளி இழக்க நேரிட்டது. மன்னன் இறைவனை வேண்டினான். இறைவனும் மன்னன் கனவில் தோன்றி, இன்றைய வீரபாண்டி தலங்கள் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, நீ வைகை கரை ஓரமாக சென்று, நிம்பா ஆரணியத்தில் உமாதேவி அம்சம் பெற்ற கௌமாரி தவமியற்றுகிறாள். அங்கு சென்று அவளை வணங்கு.

உன் கண்கள் இருள் நீங்கி ஒளி பெரும் என்றார். அதேபோல் கௌமாரியை வணங்கிய வீரபாண்டிய மன்னர் ஒரு கண்ணையும், கௌமாரி கட்டளைப்படி திருக்கண்ணீஸ்வரமுடையாரை வணங்கிய மன்னன் மறு கண்ணையும் பெற்றார்.

பார்வை பெற்ற மன்னன் கண்ணீஸ்வரருக்கு கற்கோவில் அமைத்து வழிபாடு செய்தான். அதுவே வீரபாண்டி என அழைக்கப்பெற்றது. வீரபாண்டியில் உள்ள கண்ணீஸ்வரமுடையார் கோவில் கௌமாரிபார்க்கும் திசையில் அமைந்துள்ளது.

கோவில் அமைப்பு :

இந்த கோவில் முன் கருப்பண்ணசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இதுவே இக்கோவிலுக்கு காவல் தெய்வமாக உள்ளது.

காவல் தெய்வத்தை கடந்து முன்மண்டபம், அதனை அடுத்து கம்பந்தடி மண்டபம் அமைந்துள்ளது. இந்த கம்பந்தடி மண்டபத்தில் தான் சித்திரை திருவிழா கம்பம் நடப்படுகிறது.

கம்பந்தடி மண்டபத்தை கடந்து மகாமண்டபம் அமைந்துள்ளது. கடந்து முன் செல்லும் கருவறையில் கௌமாரி கன்னி தெய்வமாக காட்சியளிக்கிறார்.

பிராத்தனைகள் :

கண்நோய், அம்மை நோய், தீராத நோய் கண்டவர்கள் என அனைத்து தரப்பினரும் அம்மனை தரிசித்து தீர்த்தமும், அருளும் பெற்று விமோசனம் அடைகின்றனர்.

மேலும் குழந்தை வரம், திருமண யோகம், வேலைவாய்ப்பு என பலவற்றுக்கும் இங்கு வந்து பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

நேர்த்திக் கடன் :

வேண்டிய வரம் கிடைத்ததும் அக்னிச் சட்டி எடுத்தும் ஆயிரம் கண் பானை சுமந்தும் மாவிளக்கு எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அம்மை குணமாக வேண்டுவோர் சேற்றை உடலில் பூசி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சிறப்புகள் :

கோவில் கோபுரத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளான மகாத்மா காந்தி, கஸ்தூரிபா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரது உருவச் சிலைகள் கோபுரத்தில் இடம் பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக