• எங்களை பற்றி
  • எங்களை தொடர்பு கொள்ள
  • தனியுரிமைக்கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • பொறுப்பு துறப்பு
  • விளம்பரம் செய்ய
ஊர்க்கோடாங்கி
  • ஈஸியா கத்துக்கலாம் வாங்க
  • உள்ளூர் முதல் உலகம் வரை
  • அறிந்து கொள்வோம்
  • சமையல் குறிப்புகள்
  • ஆன்மிகமும் - ஜோதிடமும்
  • அமானுஸ்யம்
  • அந்த நாள் ஞாபகம்
    • அருள்தரும் ஆலயங்கள்
    • மேலும் சில ;
      • குட்டிக்கதைகளும் -கட்டுரைத்தொடர்களும்
      • ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
      • ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
      • கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்;
      • வரலாறு;
      • பாட்டி வைத்தியம்

Learn Carnatic Music in Online

Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our WhatsApp channel

புதன், 9 அக்டோபர், 2019

`சின்ன வயசு ஞாபகம் வந்துருச்சு சார்!' - திருட்டுக்கு நடுவே ஊஞ்சலாடிய திருடன் வாக்குமூலம்

ஊர்க்கோடாங்கி புதன், அக்டோபர் 09, 2019
ஊஞ்சலாடிய திருடன் 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


விழுப்புரத்தில் திருடுவதற்குச் சென்ற வீட்டின் மொட்டை மாடியில் ஊஞ்சலாடிய திருடனை சிசிடிவி கேமராப் பதிவுகள் மூலம் அடையாளம் கண்டு கைது செய்திருக்கிறார்கள் காவல்துறையினர்.
விழுப்புரம் சுதாகர் நகரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் இளங்கோ. இவர் தங்கள் பகுதியில் அடிக்கடி நடக்கும் திருட்டுக்களைக் கண்டுபிடிப்பதற்காக தனது வீட்டைச் சுற்றி 6 இடங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியிருந்தார்.
கடந்த மாதம் 18-ம் தேதி பக்கத்து வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடு போனதைக் கேள்விப்பட்ட இவர், தனது வீட்டின் சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தார்.
அப்போது ஆசிரியர் இளங்கோவின் வீட்டில் தரைத் தளத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் அந்தத் திருடன் எதையோ கழற்ற முயற்சி செய்வது தெரியவந்தது.
சச்சிதானந்தம்
சச்சிதானந்தம்



பின்னர், சிறிதுநேரம் கழித்து மொட்டை மாடிக்கு வந்து தனது ஸ்மார்ட்போன் டார்ச்லைட் உதவியால் எதையோ தேடுவதும், பின் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு ஹாயாக ஓய்வெடுப்பதுமாக பதிவான காட்சிகளால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர் இளங்கோ, அதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடிவந்தனர். இந்நிலையில்தான், சம்பந்தப்பட்ட அந்த நபர் விழுப்புரம் வி.மருதூர் பகுதியைச் சேர்ந்த சச்சிதானந்தம் (35) என்பதைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்திருக்கின்றனர் காவல்துறையினர். இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடி விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்த சச்சிதானந்தம், சம்பவத்தன்று ஆசிரியர் இளங்கோ வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடுவதற்காகச் சென்றிருக்கிறார்.
சச்சிதானந்தம்
சச்சிதானந்தம்


அப்போது அங்கிருந்த நாய் அவரைப் பார்த்து குரைத்திருக்கிறது. அதில், பயந்துபோன சச்சிதானந்தம் மொட்டைமாடிக்குச் சென்றிருக்கிறார். பெட்ரோல் திருடுவதற்கு அங்கு எதாவது பாட்டில்கள் இருக்குமா என்றுதான் செல்போன் டார்ச் மூலம் தேடியிருக்கிறார். 

எதுவும் கிடைக்கவில்லை என்றவுடன் தான் அங்கிருந்த ஊஞ்சலில் ஆடி ரிலாக்ஸ் செய்திருக்கிறார். வெளியூருக்குச் செல்வதற்காக சச்சிதானந்தம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அவரைக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

 மேலும், `திருடுவதற்குச் சென்ற நீ ஏன் ஊஞ்சல் ஆடினாய்?' என்று சச்சிதானந்தத்திடம் காவல்துறையினர் கேட்டபோது, ``எனக்கு சிறு வயது ஞாபகம் வந்துவிட்டது. சிறு வயதில் மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடியிருக்கிறேன். ஊஞ்சலைப் பார்த்ததும் அந்த ஞாபகம் வந்துவிட்டதால் அதில் அமர்ந்து சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

நீங்கள் படிக்க மேலும் சில

  • 12 ராசிகளுக்குமான 2024 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
  • மாவட்ட வாரியாக பிறப்பு சான்றிதழ் வாங்க
  • நவ கிரஹங்களின் வரலாறு
  • பழமொழியும் அதன் அர்த்தங்களும்
  • யோகாசனம்
  • 63 நாயன்மார்கள்
  • சிவபுராணம் (நிறைவுற்றது)
  • எண் கணித பலன்கள்
  • பொன்னியின் செல்வன்
  • மகாபாரதம் (நிறைவுற்றது)
  • சிவபுராணம் - பாகம் 2 (திருவிளையாடலும், திருவினையும்) (நிறைவுற்றது)
  • பல்லி விழும் பலன்கள்
  • இராமாயணம் (நிறைவுற்றது)
  • ரிலாக்ஸ் ப்ளீஸ்
  • விளம்பரம் செய்ய

இந்த வாரம் அதிகம் படித்தவை

  • வெற்றிலையுடன் சேராத பாக்கு எது -ரிலாக்ஸ் ப்ளீஸ்
    ----------------------------------------------------- கலக்கலான ஜோக்ஸ்...!! ----------------------------------------------------- நோயாள...
  • ஹத யோகா
        இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந...
  • உருவத்தில் சிறியவன், உழைப்பில் பெரியவன். அவன் யார்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!
    ---------------------------------------------------- சிரிக்கலாம் வாங்க...!! ---------------------------------------------------- டாக்டர் : உ...
  • 30-06-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
    30-06-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
    ஆனி 16 - ஞாயிற்றுக்கிழமை 🔆 திதி : பிற்பகல் 01.35 வரை நவமி பின்பு தசமி. 🔆 நட்சத்திரம் : காலை 09.10 வரை ரேவதி பின்பு அஸ்வினி. 🔆...
  • பச்சைக் கதவு, வெள்ளை ஜன்னல், உள்ளே கறுப்பு ராஜா. அது என்ன? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!
    ------------------------------------------------------- கொஞ்சம் சிரிங்க பாஸ்...!! ------------------------------------------------------- தந...
  •  J. பேபி - இதயத்தை தொடும் உணர்ச்சிப்பூர்வ பயணம் பட விமர்சனம்
    J. பேபி - இதயத்தை தொடும் உணர்ச்சிப்பூர்வ பயணம் பட விமர்சனம்
    ஜே. பேபி படம், குடும்ப உறவுகளின் சிக்கல்களையும், பிள்ளை-பெற்றோர் பாசத்தையும் மையமாக கொண்ட ஒரு உணர்ச்சிபூர்வமான கதை. ஐந்து மகன்க...
  • 3-ம் வீட்டில் கேது இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    'வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் தலைகீழாக மாற்றுபவர் கேதுபகவான். மனதை பாதிக்கும் மாற்ற...
  • ஆசைக்கும் எல்லை உண்டு... படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!
    ஆசைக்கும் எல்லை உண்டு !! ஒரு வன அதிகாரிக்கு, அழகான ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டே அந்தப் பெண் காட்டி...
  • 12-ம் வீட்டில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர், நீதி அரசர் சனிபகவான். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள்காரகன் என பல பெயர்களில் அழ...
  • அங்கதன் தூது செல்லுதல்...!
    அன்றைய பொழுது கழிந்து, சூரியன் தன் ஒளிகளை வீசிக் கொண்டிருந்தது. வடக்கு வாயிலுக்கு வெளியே இராமர் தனது பதினேழு வெள்ளம் படையுடன் போருக்கு ஆயத்...
Subscribe via Email It’s Free


*We Hate Spam!

Intrested in Carnatic Music

Intrested in Carnatic Music

© ஊர்க்கோடாங்கி / பொறுப்பு துறப்பு / சேவை விதிமுறைகள் / தனி யுரிமைக் கொள்கை / விளம்பரம் செய்ய / எங்களை பற்றி