>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 1 அக்டோபர், 2019

    `வெட்கப்படுகிறேன்... அப்போதே படித்திருக்க வேண்டும்!'- தமிழின் பெருமையைப் பேசும் ஆனந்த் மஹிந்திரா

     Image result for `வெட்கப்படுகிறேன்... அப்போதே படித்திருக்க வேண்டும்!'- தமிழின் பெருமையைப் பேசும் ஆனந்த் மஹிந்திரா


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    ஐ.நாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, ``யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனின் புறநானூற்றுப் பாடலை மேற்கோள்கட்டி தமிழைப் புகழ்ந்து பேசினார். இந்நிலையில் இன்று சென்னை ஐ.ஐ.டி-யின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ``நான் அமெரிக்கா சென்று வந்திருக்கிறேன். அங்கு பேசுகையில், `தமிழ்மொழி மிகவும் பழைமையான மொழி’ என்று சொல்லியிருக்கிறேன்.

    இதுதான் ஊடகங்களில் பேசப்பட்டுவருகிறது. உலகின் மிகப்பழைமையான மொழி தமிழ். எனவே தமிழைப்போற்றுவோம். தமிழர்களின் விருந்தோம்பல் சிறந்தது. இட்லி, வடை ஆகிய உணவுகளைச் சாப்பிட்டால் உற்சாகம் பிறக்கும்" எனப் பேசினார். இதற்கு வரவேற்பு தெரிவித்து கமென்டுகள் குவிந்துவருகின்றன.

    இதற்கிடையே மஹிந்திரா குரூப் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா தமிழ் மொழி குறித்து தற்போது இரண்டு டுவீட்களைப் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. ``ஐ.நாவில் பிரதமர் மோடி உலகின் பழைமையான மொழி தமிழ் என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார். இதுவரை இது தெரியாமல் இருந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். இந்த உண்மை இவ்வளவு நாள் எனக்குத் தெரியாமல் இருந்துள்ளது. தமிழ்மொழியின் பெருமையையும் இந்த உண்மையையும் நாம் இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும்.

    நான் ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில்தான் படித்தேன். அப்போதே தமிழைப் படித்திருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக என் பள்ளித் தோழர்களிடமிருந்து துஷ்பிரயோகம் செய்யும் சில வார்த்தைகளை மட்டுமே நான் கற்றுக்கொண்டேன். இது எனது குழுவின் தமிழ் பேசும் உறுப்பினர்களை வெட்கப்பட வைக்கிறது'' எனப் பதிவிட்டுள்ளார். இந்த டுவீட் தற்போது தமிழ் இளைஞர்களிடையே வைரலாகப் பரவி வருகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக