• எங்களை பற்றி
  • எங்களை தொடர்பு கொள்ள
  • தனியுரிமைக்கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • பொறுப்பு துறப்பு
  • விளம்பரம் செய்ய
ஊர்க்கோடாங்கி
  • ஈஸியா கத்துக்கலாம் வாங்க
  • உள்ளூர் முதல் உலகம் வரை
  • அறிந்து கொள்வோம்
  • சமையல் குறிப்புகள்
  • ஆன்மிகமும் - ஜோதிடமும்
  • அமானுஸ்யம்
  • அந்த நாள் ஞாபகம்
    • அருள்தரும் ஆலயங்கள்
    • மேலும் சில ;
      • குட்டிக்கதைகளும் -கட்டுரைத்தொடர்களும்
      • ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
      • ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
      • கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்;
      • வரலாறு;
      • பாட்டி வைத்தியம்

Learn Carnatic Music in Online

Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our WhatsApp channel

சனி, 30 நவம்பர், 2019

`125 ரூபாய் கடனைக் கொடுக்கல; அம்மாவை அவதூறாகப் பேசினான்'- போதையில் நண்பனைக் கொன்ற இளைஞர்

ஊர்க்கோடாங்கி சனி, நவம்பர் 30, 2019
கொலை செய்யப்பட்ட ராபர்ட்       



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

 சென்னை பிளாட்பாரத்தில் தங்கியிருந்த நண்பர்களுக்குள் ஏற்பட்ட கடன் தகராறு கொலையில் முடிந்திருக்கிறது.
சென்னை கே.கே.நகர் அண்ணா மெயின்ரோடு, கே.வி.சண்முகம் சாலை சந்திப்பில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பதாக கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அப்போது, இறந்துகிடந்தவரின் பெயர் ராபர்ட் (35) என்பதும் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, பிளாட்பாரத்தில் நேற்றிரவு தங்கியவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது, ராபர்ட்டுக்கும் அவரின் நண்பர் சிவக்குமாருக்கும் இடையே நேற்றிரவு வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறினர். சிவக்குமாரைப் பிடித்த போலீஸார் அவரிடம் விசாரித்தபோது, ராபர்ட் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்தது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``அருப்புக் கோட்டையைச் சேர்ந்த ராபர்ட், கடந்த 18 ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்து கூலி வேலை செய்துவந்தார். கே.கே.நகர் பகுதியில் உள்ள பிளாட்பாரம்தான் ராபர்ட்டுக்கு வீடு. அந்த பிளாட்பாரத்தில் தங்கியிருந்த சிவக்குமாருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிவக்குமாரின் சொந்த ஊர் விழுப்புரம். ஒரே இடத்தில் தங்கியிருந்ததால் இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகிவந்துள்ளனர்.
சிவக்குமாரிடம் ராபர்ட் 250 ரூபாயைக் கடனாக வாங்கியுள்ளார். அதில் 125 ரூபாயைக் கொடுத்துவிட்டார். மீதம் 125 ரூபாயைக் கொடுக்காமல் இழுத்தடித்துவந்துள்ளார். நேற்று இரவு, இருவரும் மது அருந்தியபோது ராபர்ட்டிடம் கடனைக் கேட்டுள்ளார் சிவக்குமார். அப்போது போதையில் இருந்த ராபர்ட், சிவக்குமாரின் குடும்பத்தைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார்.
இதனால் பிளாட்பாரத்திலேயே இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். பிறகு, பைக்கை எடுத்துக்கொண்டு சிவக்குமார் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது ராபர்ட், மீண்டும் சிவக்குமாரை வம்புக்கு இழுத்துள்ளார். இதனால் பைக்கை விட்டு கீழே இறங்கியவர், காலியான பீர்பாட்டிலை உடைத்து ராபர்ட்டின் கழுத்தில் குத்தியுள்ளார்.
இதில் ரத்தம் வெளியேறிய நிலையில், சம்பவ இடத்திலேயே ராபர்ட் இறந்துவிட்டார். ராபர்ட்டை கொலைசெய்த குற்றத்துக்காக சிவக்குமாரை கைதுசெய்துள்ளோம். ராபர்ட்டின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது" என்கின்றனர்.
சிவக்குமார் போலீஸாரிடம் பேசுகையில், ``நானும் ராபர்ட்டும் மது அருந்தினோம். அப்போது எனக்குத் தர வேண்டிய கடன் தொகை 125 ரூபாயை ராபர்ட்டிடம் கேட்டேன். அப்போது, அவர் என்னை அசிங்கமாகத் திட்டினார். அதோடு, என்னைப் பெற்ற தாயை அவதூறாகப் பேசினார். அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அதனால்தான் கொலைசெய்தேன்" என்று கூறியிருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

நீங்கள் படிக்க மேலும் சில

  • 12 ராசிகளுக்குமான 2024 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
  • மாவட்ட வாரியாக பிறப்பு சான்றிதழ் வாங்க
  • நவ கிரஹங்களின் வரலாறு
  • பழமொழியும் அதன் அர்த்தங்களும்
  • யோகாசனம்
  • 63 நாயன்மார்கள்
  • சிவபுராணம் (நிறைவுற்றது)
  • எண் கணித பலன்கள்
  • பொன்னியின் செல்வன்
  • மகாபாரதம் (நிறைவுற்றது)
  • சிவபுராணம் - பாகம் 2 (திருவிளையாடலும், திருவினையும்) (நிறைவுற்றது)
  • பல்லி விழும் பலன்கள்
  • இராமாயணம் (நிறைவுற்றது)
  • ரிலாக்ஸ் ப்ளீஸ்
  • விளம்பரம் செய்ய

இந்த வாரம் அதிகம் படித்தவை

  • வெற்றிலையுடன் சேராத பாக்கு எது -ரிலாக்ஸ் ப்ளீஸ்
    ----------------------------------------------------- கலக்கலான ஜோக்ஸ்...!! ----------------------------------------------------- நோயாள...
  • ஹத யோகா
        இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந...
  • உருவத்தில் சிறியவன், உழைப்பில் பெரியவன். அவன் யார்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!
    ---------------------------------------------------- சிரிக்கலாம் வாங்க...!! ---------------------------------------------------- டாக்டர் : உ...
  • 30-06-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
    30-06-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
    ஆனி 16 - ஞாயிற்றுக்கிழமை 🔆 திதி : பிற்பகல் 01.35 வரை நவமி பின்பு தசமி. 🔆 நட்சத்திரம் : காலை 09.10 வரை ரேவதி பின்பு அஸ்வினி. 🔆...
  • பச்சைக் கதவு, வெள்ளை ஜன்னல், உள்ளே கறுப்பு ராஜா. அது என்ன? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!
    ------------------------------------------------------- கொஞ்சம் சிரிங்க பாஸ்...!! ------------------------------------------------------- தந...
  •  J. பேபி - இதயத்தை தொடும் உணர்ச்சிப்பூர்வ பயணம் பட விமர்சனம்
    J. பேபி - இதயத்தை தொடும் உணர்ச்சிப்பூர்வ பயணம் பட விமர்சனம்
    ஜே. பேபி படம், குடும்ப உறவுகளின் சிக்கல்களையும், பிள்ளை-பெற்றோர் பாசத்தையும் மையமாக கொண்ட ஒரு உணர்ச்சிபூர்வமான கதை. ஐந்து மகன்க...
  • 3-ம் வீட்டில் கேது இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    'வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் தலைகீழாக மாற்றுபவர் கேதுபகவான். மனதை பாதிக்கும் மாற்ற...
  • ஆசைக்கும் எல்லை உண்டு... படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!
    ஆசைக்கும் எல்லை உண்டு !! ஒரு வன அதிகாரிக்கு, அழகான ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டே அந்தப் பெண் காட்டி...
  • 12-ம் வீட்டில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர், நீதி அரசர் சனிபகவான். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள்காரகன் என பல பெயர்களில் அழ...
  • அங்கதன் தூது செல்லுதல்...!
    அன்றைய பொழுது கழிந்து, சூரியன் தன் ஒளிகளை வீசிக் கொண்டிருந்தது. வடக்கு வாயிலுக்கு வெளியே இராமர் தனது பதினேழு வெள்ளம் படையுடன் போருக்கு ஆயத்...
Subscribe via Email It’s Free


*We Hate Spam!

Intrested in Carnatic Music

Intrested in Carnatic Music

© ஊர்க்கோடாங்கி / பொறுப்பு துறப்பு / சேவை விதிமுறைகள் / தனி யுரிமைக் கொள்கை / விளம்பரம் செய்ய / எங்களை பற்றி