>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 12 நவம்பர், 2019

    டியூசிஎஸ் அதிகாரியிடம் செல்போன் பறிப்பு: 2 இளைஞர்கள் கைது; 12 செல்போன்கள் பறிமுதல்

     Image result for டியூசிஎஸ் அதிகாரியிடம் செல்போன் பறிப்பு: 2 இளைஞர்கள் கைது; 12 செல்போன்கள் பறிமுதல்
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    டியூசிஎஸ் அதிகாரியிடம் செல்போன் பறித்த இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
    திருச்சி மாவட்டம் லிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் அடைக்கன் (49). இவர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். சென்னை திருவல்லிக்கேணி தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி, பணிக்குச் சென்று வருகிறார்.
    கடந்த 8-ம் தேதி கலை 9 மணி அளவில் வழக்கம்போல் பணிக்குச் சென்ற அடக்கன், செல்லப்பிள்ளையார் கோயில் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மஞ்சள் கலர் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போனைப் பறித்துச் சென்றனர்.
    இதுபற்றி ஜாம் பஜார் காவல் நிலையத்தில் அடைக்கன் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீஸார் நேற்று மாலை வாகன எண்ணை வைத்து செல்போனைப் பறித்துச் சென்ற இளைஞர்களைக் கைது செய்தனர்.
    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ராயப்பேட்டை பேகம் சாகிப் 5-வது தெருவில் வசிக்கும் முகமது ரவூஃப் (21), இம்ரான் பாட்சா (21) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 12 செல்போன்களை பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.
    சமீபகாலமாக சிசிடிவி கேமரா காரணமாக செயின் பறிப்பு, செல்போன் பறிப்புகள் குறைந்திருந்த நிலையில் சில வாரங்களாக அங்கொன்றும் இன்கொன்றுமாக செல்போன் பறிப்பு, வழிப்பறி நபர்கள் தலைதூக்கத் தொடங்கியுள்ளனர்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக