Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 6 நவம்பர், 2019

7,000 கோடிக்கு வங்கி மோசடி: 169 இடங்களில் சோதனை!


























இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




வங்கிகளில் நிதி மோசடி செய்த நிறுவனங்களில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
  • ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.118.49 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை, மதுரை, திருப்பூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது.
பொதுத் துறை வங்கிகளில் நிதி மோசடி செய்த விவகாரத்தில் மத்திய புலனாய்வுத் துறை 169 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளது.

இந்திய வங்கிகளில் பெரிய அளவில் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுவதும், போலியான ஆவணங்களைக் கொண்டு நிதி மோசடி செய்வதும் அதிகரித்துவிட்டது. கடன் மோசடி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரே மோசடியாளர்கள் நாட்டை விட்டே தப்பியோடி விடுகின்றனர்.

இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக மத்திய ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. பொதுத் துறை வங்கிகளில் நிதி மோசடி செய்த நிறுவனங்கள் மீது மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ரூ.7,000 கோடிக்கு மேலான நிதி மோசடிகளை அடிப்படையாக வைத்து 35 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளின் கீழ் நேற்று (நவம்பர் 5) காலையில் சுமார் 169 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மதுரை, சென்னை, பெங்களூரு, திருப்பூர், கொல்கத்தா, பாட்னா, டெல்லி, குருகிராம், ஃபரிதாபாத், கொல்லம், கொச்சின், சூரத், அகமதாபாத், கான்பூர், அமிர்தசரஸ், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது.

நிதி மோசடி மீதான புகார்களில் அதிகபட்சமாக அட்வான்ஸ் சர்பேக்டண்ட்ஸ் நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.118.49 கோடி மோசடி செய்துள்ளது. செல் மேனுபேக்சுரிங் நிறுவனம் பேங்க் ஆஃப் மகாஷ்டிராவில் ரூ.113.55 கோடி மோசடி செய்துள்ளதாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் பேங்க், அலகாபாத் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பெங்க், பேங்க் ஆஃப் பரோடா, தேனா பேங்க், கனரா பேங்க், ஆந்திரா பேங்க், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமெர்ஸ் ஆகிய வங்கிகளிலும் பெரும் நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளன.

சோதனைக்குப் பின் உண்டான விவரங்கள் எதையும் சிபிஐ வெளியிடவில்லை.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக