Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 16 நவம்பர், 2019

பூஜையறையில் தண்ணீர் வைத்திருப்பது ஏன் தெரியுமா?...

 Image result for பூஜையறையில் தண்ணீர் வைத்திருப்பது ஏன் தெரியுமா?..

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


இறைவனின் அருளை வேண்டி மனம் முழுவதும் ஈடுபடும் ஒரு விஷயம்தான் பூஜை. ஆண்டவனை மனமுருக வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். பூஜை அறையில் ஏன் தண்ணீர் வைக்க வேண்டும்?... என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்...
 ப்ர என்றால் கடவுள். நாம் படைக்கும் வெறும் சாதம், ப்ர என்ற கடவுளுடன் சம்பந்தப்படும்போது, ப்ரசாதம் (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய சக்திகள் அணுகாது. மனோபலம் பெருகும் என்பது நம்பிக்கை.
 நாம் பூஜை செய்யும்போது இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதுண்டு. அதாவது எச்சில் படாத உணவுகள், பழங்கள் ஆகியவற்றை நாம் கடவுளுக்கு வைக்கலாம்.
 நம்முடைய பூஜையறையில் மண் பானைகளிலோ அல்லது செம்பு பாத்திரத்திரங்களிலோ தண்ணீரை நிரப்பி வைப்பது மிகவும் நல்ல பலனை தரும்.
 வழிப்பாட்டின்போது நாள்தோறும் தியானத்தில் அமர்ந்து நமக்கு பிடித்த தெய்வத்தின் மூல மந்திரத்தை சொல்ல வேண்டும்.
 அவ்வாறு செய்வதால் நீங்கள் சொல்லும் மந்திரத்தின் (நேர்மறை ஆற்றல்) அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும். இவ்வாறு செய்து அந்த தண்ணீரை அருந்துவதால் நன்மைகள் உண்டாகும்.
 பூஜையின்போது தீபாராதனை காட்டி, தெரிந்த தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடலாம். எந்தவொரு காரணத்தை முன்னிட்டும் இரும்பு பொருட்களை பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது.
 இரும்பு எமனுக்கு உரியது. இரும்பினால் நேர்மறை சக்திகளை கிரகிக்க முடியாது. தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, வெள்ளி, மண்ணால் ஆன பூஜைப் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.

 பூஜை செய்யும்போதெல்லாம் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜை செய்ய வேண்டும். அடுத்தநாள் அதை செடியின் மீது ஊற்றிவிட வேண்டும். இப்படி செய்வதால் துர்சக்திகள் நம் வீட்டை அண்டாது.
எனவே, இறைவனை பூஜித்து... பரிபூரண அருளை பெற்று வாழ்வில் அனைத்து வளமும் நலமும் பெறுவோமாக...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக