>>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 19 நவம்பர், 2019

    மண்ணெண்ணெய் யூஸ் பண்றவங்க இருக்காங்களா?

     

     

     

     

     



    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com 


     

    கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மண்ணெண்ணெய் விநியோகத்துக்கான 29 ஒப்பந்தங்களைக் கைவிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்தியக் குடும்பங்களுக்கு சுகாதாரமான சமையல் எரிவாயு கிடைக்கும் நோக்கத்தில் மத்திய அரசால் 2016ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    விறகு, மண்ணெண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் சுகாதாரமான சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தவே இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாட்டின் அனைத்து குடும்பங்களுக்கும் இன்னமும் சமையல் சிலிண்டர் இணைப்புகள் கிடைக்கப்பெறவில்லை. எனவே பல குடும்பங்கள் மண்ணெண்ணெய் மற்றும் விறகுகளையே சமையலுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். (மின்சாரம் இல்லாத வீடுகளில் விளக்கு எரிக்க மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்ட நிலையில், அனைத்து குடும்பங்களுக்கும் மின் இணைப்பு வழங்கும் சௌபாக்யா திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.)

    சமையல் சிலிண்டர் இணைப்புகள் ஒருபுறம் வழங்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் மண்ணெண்ணெய் விநியோகம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. அரசின் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர் ஒருவருக்கு மாதத்துக்கு ஒரு லிட்டருக்கும் குறைவான அளவிலேயே மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுகிறது.

    மண்ணெண்ணெய்க்கான ஒப்பந்தங்களையும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாகக் குறைத்து வருகின்றன. மண்ணெண்ணெய் விநியோக ஒப்பந்தங்கள் குறித்தும், நாட்டில் மண்ணெண்ணெய் பயன்பாடு இன்னும் உள்ளதா, அவர்கள் பற்றிய புள்ளி விவரங்களை எண்ணெய் நிறுவனங்கள் வைத்துள்ளனவா என்று மக்களவையில் நவம்பர் 18ஆம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், “எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மூன்று ஆண்டுகளிலும், இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையிலும் மண்ணெண்ணெய் விநியோகத்துக்கான 29 ஒப்பந்தங்களை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

    பீகாரில் ஒரு ஒப்பந்தமும், குஜராத்தில் 7 ஒப்பந்தங்களும், கர்நாடகாவில் 11 ஒப்பந்தங்களும், ஒடிசாவில் ஒரு ஒப்பந்தமும், பஞ்சாபில் 2 ஒப்பந்தங்களும், தமிழகத்தில் 4 ஒப்பந்தங்களும், உத்தரப் பிரதேசத்தில் 3 ஒப்பந்தங்களும் கைவிடப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மண்ணெண்ணெய் பயன்படுத்தும் நபர் குறித்த சோதனை எதையும் எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்ளவில்லை எனவும் தர்மேந்திர பிரதான் தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக