>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 11 நவம்பர், 2019

    சூப்பரான வேர்க்கடலை போளி செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்...!! சத்தான வேர்க்கடலை போளி !!

     Image result for வேர்க்கடலை போளி

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    பருப்பு மற்றும் தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீர்கள். இப்போது சத்தான வேர்க்கடலையை பூர்ணம் வைத்து சூப்பரான போளி செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.

    தேவையானப் பொருட்கள் :

    பச்சை வேர்க்கடலை - 250 கிராம்

    உருளைக்கிழங்கு - 3

    கேரட் - 3

    பெருங்காயம் - 2 சிட்டிகை

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    கடுகு - ஒரு டீஸ்பூன்

    கோதுமை மாவு - 3 கப்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்

    எலுமிச்சை ஜூஸ் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை :

    முதலில் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, கேரட் ஆகிய மூன்றையும் நன்றாக வேகவிட்டு ஆறியதும் நன்றாக மசித்துக் கொள்ளவும்.

    பிறகு மசித்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பெருங்காயம், சிறிதளவு உப்பு, மிளகாய் தூள், கொத்தமல்லித்தழை, எலுமிச்சை ஜூஸ் சேர்த்து, கலந்து வைத்துக் கொள்ளவும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கலந்து வைத்துள்ள வேர்க்கடலை கலவையை போட்டு 5 நிமிடம் நன்றாக கிளறி ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.

    பின் கோதுமை மாவில் தேவையான அளவு தண்ணீர், சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், ஒரு கரண்டி எண்ணெய் விட்டு தளர பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி அதன் உள்ளே வேர்க்கடலை கலவை உருண்டையை வைத்து மூடிவிடவும்.

    பின்பு கோதுமை உருண்டையை வாழை இலையின் மீது போளியாக தட்டி தோசைக்கல்லில் போட்டு, சுற்றி எண்ணெய் சேர்த்து வெந்ததும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், சூப்பரான மசாலா வேர்க்கடலை போளி தயார்.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக