Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 7 நவம்பர், 2019

கொஞ்சம் சிரிங்க பாஸ்



 Image result for கொஞ்சம் சிரிங்க பாஸ்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



உட்கார முடியாத கடை... கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
கொஞ்சம் சிரிங்க பாஸ்..!!

பிரியா  : சார்! என் கணவரை காணோம் சார்.
போலீஸ்  : கடைசியா அவர எப்போ பாத்தீங்க?
பிரியா  : ரெண்டு நாளைக்கு முன்னாடி இட்லிக்கு மாவரைக்க கடைக்கு போனாரு. இன்னும் வீட்டுக்கு வரல சார்.!
போலீஸ்  : இரண்டு நாள் ஆச்சா? அப்போ, இரண்டு நாளா என்ன பண்ணீங்க?
பிரியா : சப்பாத்தி சுட்டு சாப்பிட்டேன் சார்.
போலீஸ்  : 😳😳
-------------------------------------------------------------------------------------------------
டிராபிக் கான்ஸ்டபிள் : யோவ் நடுரோட்டை விட்டு ஓரமா போய்யா. வண்டிக்காரனுங்க வந்து மோதிடப் போறானுங்க.
குடிகாரன் : என்னை ஓரமா போகச் சொல்லிட்டு நீங்க மட்டும் நடுரோட்டிலே நின்னா எப்படி சார்?
டிராபிக் கான்ஸ்டபிள் : 😳😳
-----------------------------------------------------------------------------------------------
பாபு : எங்க அம்மாவுக்கு சுகர் இருக்குன்னு தெரிஞ்சவுடனே, என் மனைவி ஸ்வீட் சாப்பிடறதையே நிறுத்திட்டா..
சோமு : மாமியார் மேல அவ்வளவு பாசமா?
பாபு : நீங்க வேற! அவ பங்கு ஸ்வீட்டையும் மாமியாருக்கே கொடுத்துடறா..
சோமு : 😂😂
--------------------------------------------------------------------------------------------
சொல்லோடு விளையாடலாம்...!
🌟 வெட்டும் காய் எது - கத்தரிக்'காய்".

🌟 எப்போதும் சிரிக்கும் பூச்சி - '
🌟 உட்கார முடியாத கடை - சாக்'கடை".

---------------------------------------------------------------------------------
👆👆
அறிவாளி என்பதற்கு எதிர்ப்பதம் என்ன?
உடனே நம்மவர்கள் 'முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரணப்பெயர்சொல். சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம்தான் என்ன..?

அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு, போகும்போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும்.

அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக்கொண்டு கூடவே வருவார்கள். அவர்கள் சப்பரம் நின்றவுடன் முட்டு கொடுத்து சப்பரத்தை நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை 'முட்டு ஆள்" என்பர்.

சப்பரத்திற்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை 'முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது. எனவே! அறிவாளிக்கு எதிர்ப்பதம் 'முட்டாள்" இல்லை 'அறிவிலி" என்பதாகும்.

----------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக