Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 நவம்பர், 2019

துன்பங்கள் இல்லாத வாழ்க்கை எப்போது வரும்... உங்களுக்கு தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com 



இது சிரிக்க மட்டுமே...!!
சீலா : குழந்தைக்கு செல்லம் கொடுக்கலாமான்னு டாக்டரைக் கேளுங்க.
பாபு : அவரை எதுக்கு கேக்கணும்?
சீலா : டாக்டரை கேக்காம குழந்தைக்கு எதுவும் தரக்கூடாதுன்னு உங்க அம்மா சொல்லி இருக்காங்க.
பாபு : 😳😳
-----------------------------------------------------------------------------------------------------------
சீனு : ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
தீபக் : நோயோடதான்!
சீனு : 😩😩
-----------------------------------------------------------------------------------------------------------

கலா : வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிக்கிட்டே இருக்காரு..
பானு : ஏன்.. குடிச்சிட்டு வந்து ரொம்ப சண்டை போடுறாரா..?
கலா : இல்ல.. டாக்டர் கொடுத்த டானிக்க கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னு அடம் பிடிக்கிறாரு..!
பானு : 😂😂
-----------------------------------------------------------------------------------------------------------

நோயாளி : மறுபடியும் நான் எப்ப வரணும் டாக்டர்?
டாக்டர் : பீஸ் கொடுக்க நூறு ரூபா சேர்ந்த பிறகு வாங்க போதும்.
நோயாளி : 😳😳
-----------------------------------------------------------------------------------------------------------
 குறளும்... பொருளும்...!!

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

பொருள் :

பிறப்பு, வீடு என்பன போல் இரண்டு இரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
-----------------------------------------------------------------------------------------------------------

👭👬நண்பன் என்பவன் யார்?👭👬

எவன் ஒருவனிடம் நீ நீயாக இருக்க முடிகிறதோ அவனே உன் நண்பன்...
-----------------------------------------------------------------------------------------------------------

துன்பங்கள் இல்லாத வாழ்க்கை எப்போது வரும்?

ஆசைகள் இல்லாத வாழ்க்கையை
நீ எப்போது தேடி செல்கிறாயோ...
அப்போது, துன்பங்கள் இல்லாத வாழ்க்கை
உன்னை தேடி வரும்..
-----------------------------------------------------------------------------------------------------------
 
😀😀சிரிப்பு...!!😀😀

😀 சிரிப்புக்கும், மனதிற்கும் நேரடித்தொடர்பு உள்ளது.

😀 சிரிப்பு அலைகள்... நம்மிடம் பிறரை ஈர்க்கும்.

😀 கவலை அலைகள்... பிறரை நம்மிடமிருந்து விரட்டும்.

😀 சந்தோஷ அலைகள்... நம்மை சுற்றி நேர் மறையான (positive) எண்ணங்களை பரப்பும்.

😀 சோக அலைகள்... நம்மைச்சுற்றி எதிர் மறையான (negative) எண்ணங்களை பரப்பும்.

😀 ஆகவே உங்களால்... சிரிக்க முடிகிறது என்றால் நீங்கள் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள்.

😀 அதே நேரத்தில் இறுக்கமான இதயத்தின் திறவு கோலாகவும் சிரிப்பு உள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக