>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 25 நவம்பர், 2019

    மறந்தும்கூட வெள்ளிக்கிழமை அன்று இதை செய்துவிடாதீர்கள்..!!


    Image result for இதை செய்து விடாதீர்கள்..!!

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Join Our Telegram Channel

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    வெள்ளிக்கிழமை அன்று என்னென்ன செய்யக்கூடாது?
    வெள்ளிக்கிழமை மகத்துவம் நிறைந்த நாளாகவும், ஆன்மீக வழிபாட்டிற்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

    வெள்ளிக்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்பது ஐதீகம்.

    வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு. இதனால் சகல செல்வங்களும் சேரும்.

    பெண்கள் வீட்டை வைத்துக்கொள்வதை பொறுத்துதான் மகாலட்சுமி அருள் வீட்டிற்கு கிடைப்பதும், கிடைக்காததும் உள்ளது.

    பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று என்னென்ன செய்யக்கூடாது?

    பெண்கள் காலை எழுந்தவுடன் அடுப்பு துடைக்கக்கூடாது.

    வாசலில் புள்ளி வைத்த கோலம் போடக்கூடாது.

    பிறகு அழுக்குத்துணிகளை சேர்த்து வைக்கக்கூடாது.

    முக்கியமாக பெண்கள் ஒட்டரை அடிக்கக்கூடாது.

    சமையலில் அன்று பருப்பு சேர்க்காமல் குழம்பு வைக்கக்கூடாது.

    இவை எல்லாம் வெள்ளிக்கிழமை செய்யக்கூடாதவை.

    செய்யவேண்டியவை :

    வெள்ளிக்கிழமைக்கு முதல்நாளே அடுப்பை துடைத்து வைக்க வேண்டும்.

    வாசலில் தாமரைக்கோலம் போட்டால் வீட்டுக்குள் மகாலட்சுமி வருவதாக ஐதீகம்.

    பொதுவாக வெள்ளிக்கிழமை மட்டுமில்லாமல் பெண்கள் ஒட்டரை அடிக்கக்கூடாது. ஏனெனில் கடன்களை அதிகரிக்கும்.

    ஆண்கள்தான் ஒட்டரை அடிக்க வேண்டும்.

    பருப்பு சேர்த்துதான் அன்று குழம்பு வைக்கவேண்டும். அப்படி வைக்க பருப்பு இல்லையென்றால் ஒரு நான்கு, ஐந்து பருப்பாவது சாதம் வேகும்போது அதில் போட்டு வடிக்க வேண்டும்.

    வெள்ளிக்கிழமைகளில் இதை செய்யக்கூடாது என்று பெண்களுக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகள் போல ஆண்களும் சில செயல்களை வெள்ளிக்கிழமை அன்று செய்யக்கூடாது என கட்டுப்பாடுகள் உள்ளன.

    ஆண்கள் வெள்ளிக்கிழமை அன்று என்னென்ன செய்யக்கூடாது?

    வெள்ளிக்கிழமைகளில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.

    ஆண்கள் வெள்ளிக்கிழமை அன்று முகசவரம் செய்யக்கூடாது.

    வெள்ளிக்கிழமை அன்று தேவையில்லாத விரய செலவுகளை செய்யக்கூடாது.

    இந்த மூன்றையும் கண்டிப்பாக வெள்ளிக்கிழமைகளில் செய்யாமல் இருப்பது நல்லது. இதனால் நேர்மறை எண்ணங்கள் உண்டாகும். செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.




    ,

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக