>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 20 நவம்பர், 2019

    விளையாட்டால் நேர்ந்த விபரீதம்..!


     Image result for game


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com 


    ஒரு அழகிய கிராமத்தில் முருகன் என்ற ஒரு விவசாயி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் தன்னுடைய ஆடுகளை அருகில் உள்ள காட்டிற்கு சென்று மேய்ப்பது வழக்கம். காலையில் சென்றால் அவர் மாலையில் தான் வீடு திரும்புவார்.

    ஒரு நாள் முருகன் தன்னுடைய சொந்த வேலையின் காரணமாக பக்கத்து ஊருக்கு செல்லவேண்டி இருந்தது. இதனால் ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை தன்னுடைய மகன் ராமுவிடம் கொடுக்கலாம் என நினைத்தார். ஆனால், ராமு ஒரு விளையாட்டு பையன். எந்த ஒரு வேலையையும் சரியாக செய்யமாட்டான் என முருகனுக்கு ஒரு பயமும் இருந்தது. வேறு வழியில்லாமல் அவனிடமே ஆடுகளை மேய்க்கும் வேலையை கொடுத்துவிட்டு பக்கத்து ஊருக்கு புறப்பட்டார்.

    அடுத்தநாள் காலையில் ராமு ஆடுகளை பக்கத்தில் உள்ள காட்டிற்கு ஓட்டிச்சென்றான். காட்டை அடைந்ததும் ஆடுகள் புற்களை மேயத் தொடங்கின. ராமு அருகில் உள்ள ஒரு பாறையின் மேல் அமர்ந்தான். அவனுக்கு வேலை பார்த்து பழக்கம் இல்லை என்பதால் பொழுது போகவில்லை.

    தூரத்தில் ஒருசிலர் வயலில் வேலை செய்து கொண்டு இருந்தனர். வேலை செய்பவர்களின் கவனத்தை ஈர்க்க எண்ணிய ராமு திடீரென புலி வருது, புலி வருது, என்று கூச்சலிட்டான். ராமுவின் அலறலைக் கேட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் புலியை விரட்ட கைகளில் கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு ராமு இருக்கும் இடத்தை நோக்கி விரைவாக வந்தார்கள்.

    வந்தவர்கள் அனைவரும் புலி எங்கே என்று ராமுவிடம் கேட்டனர். ஆனால் ராமுவோ, புலி வரவில்லை, நான் பொய் சொன்னேன், என்று கூறினான். இதனால் கோபமடைந்த அவர்கள் ராமுவை திட்டிக்கொண்டே சென்றனர்.

    ராமுவோ, அவர்கள் ஏமாந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான். பிறகு, ராமு ஆடுகளை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றான். அடுத்த நாளும் ஆடுகளை மேய்க்க சென்ற ராமு புலி வருது என்று கூச்சலிட்டு வேலை செய்து கொண்டிருந்தவர்களை ஏமாற்றினான்.

    மூன்றாவது நாள் ராமு ஆடுகளை மேய்க்க விட்டுவிட்டு அதே பாறையின் மேல் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து சற்று தொலைவில் உண்மையாகவே ஒரு புலி வருவதை பார்த்தான். உடனே பாறையின் பின்னால் ஒளிந்துகொண்டு, உண்மையிலே புலி வருது, புலி வருது என்று கூச்சலிட்டான்.

    ராமுவின் அலறலை கேட்ட அனைவரும் அவன் இன்றும் பொய் தான் சொல்வான் என்று நினைத்து யாரும் உதவிக்கு வரவில்லை. அவர்கள் தங்களின் வேலையை தொடர்ந்தனர். அங்கு பாய்ந்து வந்த புலி ஒரு ஆட்டினை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டது.

    இதனைக் கண்ட ராமு நான் உண்மையை கூறிய பொழுது யாரும் உதவிக்கு வரவில்லையே என்று வருந்திக்கொண்டு மீதி இருக்கும் ஆடுகளை கூட்டிக்கொண்டு தன் வீட்டிற்கு சென்றான்.

    நீதி:

    ஒருவர் வார்த்தையில் உண்மை இல்லை என்று தெரிந்தால் அவர்கள் எப்போது உண்மை சொன்னாலும் அதை யாரும் உண்மை என்று நம்பமாட்டார்கள். அதனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் யாரிடமும் விளையாட்டிற்காக கூட பொய் கூறக்கூடாது.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக