Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 13 டிசம்பர், 2019

'கணவனை விட்டுவிட்டு என்னுடன் வா'.. வர மறுத்த பெண் 31 முறை குத்தி கொலை...

கேரளாவில் திருமண உறவை மீறிய காதலை துண்டிக்க நினைத்த பெண்ணை வாலிபர் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு குழந்தைகள் இருக்கும்போது வேறொரு வாலிபருடன் இருக்கும் பழக்கத்தை பெண்ணின் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் காதலனுடன் சுற்றி வந்த பெண்ணின் பழக்கம் ஆபத்தில் முடிந்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ஷெரிப். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருடைய மனைவி ஷைலா (40) தனது இரு பிள்ளைகளுடன் கொல்லத்தில் வசித்து வந்தார்.

பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பொருள் சேர்க்க வெளிநாட்டில் உழைத்து வந்த ஷெரிப், தனது குடும்பத்திற்காக சமீபத்தில் வீட்டை ஒன்றை கட்டி தனது கடமையை ஆற்றியுள்ளார். இந்த நிலையில் ஷைலாவிற்கு அப்பகுதியில் வசித்து வந்த அனிஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஷைலா கூறும் சிறு சிறு உதவிகளை செய்து வந்துள்ளார் அனிஷ். பின்னர் இருவரும் காலப்போக்கில் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதனால் பைக்கில் கணவன், மனைவி போல இருவரும் அவ்வப்போது சென்று வருவதை கவனித்த பெண்ணின் உறவினர்கள் ஷைலாவை கண்டித்து உள்ளனர்.

ஆனால் அதை பொருட்படுத்தாத அவர் அனிஷ்க்கு நெருங்கிய இடத்தை தந்துள்ளார். மனைவியின் செயல் வெளிநாட்டில் வேலை செய்து வரும் ஷெரிப்பிற்கு தெரிந்தவுடன் அவர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பயந்த இருவரும் ஒரு கட்டத்தில் சமரசம் ஆகினர். அதனால் ஷைலா, அனிஷை தொடர்பு கொள்வதை நிறுத்தியுள்ளார். கடைசியாக தமது காதலை முடித்துக்கொள்ளலாம் என்று கூறி அனிஷை செல்போன் மூலம் அழைத்து பேசினார் ஷைலா.

ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அனிஷ் பலமுறை ஷைலாவை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் தெரிகிறது. ஆனால் ஷைலா தனது முடிவில் திட்டவட்டமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளியில் தனது மகளை அனுப்பிவைத்து விட்டு திரும்பிய ஷைலாவை அடித்து தாக்கி 31 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் அனிஷ். பின்னர் இதுகுறித்து கொல்லம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், சிதைந்து இருந்த ஷைலாவின் உடலை மீட்டு கொல்லம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அனிஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!