Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 டிசம்பர், 2019

ரிஷப ராசி ஆங்கில வருட ராசிபலன்கள்

 Image result for ரிஷப ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்
மைதியான குணமும், மற்றவர்களை கவரும் தோற்றமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!!

மங்களகரமான விகாரி தமிழ் வருடத்தில், சதய நட்சத்திரத்தில் சஷ்டி திதியில் வ்யாகாதம் யோகத்தில் ஆங்கில புத்தாண்டு துவங்க இருக்கின்றது.
ராசிநாதனான சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில் இருக்க பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மனதில் புதிய ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரங்களில் பிரபலம் அடைவதற்கான வாய்ப்புகளும், அதற்கான உதவிகளும் சாதகமாக இருக்கும்.

குடும்ப நபர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையளிக்கும். புத்திரர்களின் செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். சுபக்காரியம் தொடர்பான முயற்சிகள் நன்முறையில் நடைபெறும்.

குடும்பத்தில் புதியவர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் வேகத்தை காட்டிலும், விவேகத்தை காட்டுவதன் மூலம் எண்ணிய இலக்கை அடைய இயலும். மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான காலங்களாக அமையும். மக்கள் பணியில் இருப்பவர்களுக்கு மக்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வாக்குவன்மையால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
விவசாயிகளுக்கு :

புதிய பயிர் விளைச்சல்களில் ஈடுபடும்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு செய்யவும். கால்நடைகளின் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். புதிய மனை வாங்குவது பற்றிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.
வியாபாரிகளுக்கு :

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான கடன் உதவிகள் சாதகமாக அமையும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளிடம் அவ்வப்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.
மாணவர்களுக்கு :

மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் படித்து அதிக மதிப்பெண்களை பெறுவார்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் அவர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்தை அளிக்கும். நண்பர்களிடம் குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும்.
பெண்களுக்கு :

உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல்கள் சாதகமாக இருக்கும். சக ஊழியர்களின் மத்தியில் உங்களின் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் பலன்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலின் மூலம் லாபம் மேம்படும்.
கலைஞர்களுக்கு :

கிடைப்பது சிறு வாய்ப்புகளாக இருந்தாலும் அதை நன்முறையில் பயன்படுத்துவது நன்மையளிக்கும். சந்தேக உணர்வினால் உடனிருப்பவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
பரிகாரம் :

புதன்கிழமைதோறும் பெருமாளை துளசியால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக