>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 14 டிசம்பர், 2019

    உயிரோடு புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தார்!

     Image result for உயிரோடு புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தார்!
    ந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் குழந்தை புதைக்கப்பட்டதை அறிந்து, ஊர் மக்கள் அதை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாடேரு வனப்பகுதியில் வசமாமிடி என்ற மலைக் கிராமம் ஒன்று உள்ளது. இந்த வசமாமிடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஒருவர், ஊருக்கு வெளியில் உள்ள புதர் ஒன்றில் சிறுநீர் கழிக்கச் சென்றார்.


    அப்போது அந்த பகுதியில் குழந்தை ஒன்றின் அழுகை சத்தம் கேட்டது. இதையடுத்து, குழந்தை அழுகை சத்தம் வந்த இடத்தை நோக்கி அந்த நபர் சென்று பார்த்துள்ளார். சத்தம் வந்த இடத்தில் மண் மூடப்பட்டிருந்தது.

    அதிர்ந்துபோன அந்த நபர், விரைந்து சென்று பார்த்தபோது, பச்சிளம் குழந்தை ஒன்றை மர்ம நபர் ஒருவர் உயிரோடு குழி தோண்டி புதைக்க முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இந்த காட்சியைக் கண்டு என்ன செய்வதென அறியாத அந்த நபர், அக்கம் பக்கத்தில் சென்றவர்களிடம் சம்பவத்தைக் கூறி, உதவிக்கு அழைத்துள்ளார்.


    மக்கள் பலர் ஒன்றுகூடி, குழந்தையை மீட்டு அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தை வைக்கப்பட்டிருந்தது.

    மருத்துவர்கள் குழந்தையின் உயிரை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டபோதும், மண் மூடி கடுமையாகப் பாதிப்படைந்திருந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தது.

    குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தீவிர விசாரணையைத் தொடக்கியுள்ளனர். மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டபோது, குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளது.
    Description: https://ssl.gstatic.com/s2/oz/images/stars/po/bubblev1/spacer.gif

    Description: https://ssl.gstatic.com/s2/oz/images/stars/po/bubblev1/spacer.gif
    Description: https://ssl.gstatic.com/s2/oz/images/stars/po/bubblev1/border_3.gif
    Description: https://ssl.gstatic.com/s2/oz/images/stars/po/bubblev1/spacer.gif
    Description: https://ssl.gstatic.com/s2/oz/images/stars/po/bubblev1/spacer.gif
    Description: https://ssl.gstatic.com/s2/oz/images/stars/po/bubblev1/spacer.gif

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக