Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 13 டிசம்பர், 2019

திருந்திய நரி..!

Image result for திருந்திய நரி..!
ரு அடர்ந்த காட்டில் பல மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அந்த காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி அவர்கள் ஏமாறுவதைக் கண்டு மனம் மகிழ்வது பொழுதுபோக்காக இருந்தது.
 அதே காட்டில் அறிவுமிக்க கொக்கு ஒன்றும் இருந்தது. அந்த கொக்கு அனைத்து மிருகங்களிடமும் நன் மதிப்பை பெற்று இருந்தது. இதை பொறுக்க முடியாத நயவஞ்சக நரி அந்த கொக்கை எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தது.
 ஒரு நாள் கொக்கு நரியின் குகை இருக்கும் வழியில் வந்துக்கொண்டிருந்தது. நரி அந்த கொக்கைப் பார்த்து நண்பனே! உன்னுடைய அறிவைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் நாளை உனக்கு ஒரு விருந்து வைக்க விரும்புகிறேன். உன்னால் வர முடியுமா? என்று கேட்டது.
 கொக்கும் சரி வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது. அடுத்த நாள், நரி சுவைமிக்க சூப் ஒன்றை செய்தது. அன்று மாலை கொக்கு நரியின் இடத்திற்கு சென்றது. நரியோ திட்டமிட்டபடி, சூப்பை அகன்ற இரு தட்டில் ஊற்றியது. ஒன்றை கொக்கிடம் கொடுத்தது.
 கொக்கினால் வாய் அகன்ற தட்டில் உள்ள சூப்பை குடிக்க முடியவில்லை. ஆனால் நரியோ அந்த சூப்பை குடித்துவிட்டு, நண்பனே இந்த சூப்பை உனக்காக செய்தேன் எப்படி இருந்தது? என்று சிரித்துக்கொண்டே கேட்டது.
 கொக்கு ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது. நரியிடம், நண்பனே சூப் மிகவும் ருசியாக இருந்தது என்று கூறியது. கொக்கு நரியிடம், இரவு நேரம் ஆக போகிறது நான் செல்ல வேண்டும் என்று கூறியது.
 செல்லும்முன், இன்று நீ எனக்கு விருந்து வைத்தாய்! பதிலுக்கு நான் நாளை உனக்கு விருந்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். உன்னால் வர முடியுமா? என்று கேட்டது.
 நரியும் வர சம்மதம் தெரிவித்தது. நரியோ கொக்கை ஏமாற்றி விட்டேன் என்ற கர்வத்துடன் சந்தோஷமாக உறங்க சென்றது. கொக்கு பசியுடனும், வருத்தத்துடனும் வீட்டிற்கு சென்றது.
 அடுத்தநாள் கொக்கு நரிக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தது. பல இறைச்சிகளை போட்டு சுவைமிக்க சூப் ஒன்றை செய்தது. அதன் வாசனை அந்த காடு முழுவதும் பரவியது.
 அன்று மாலை நரி கொக்கின் வீட்டுக்கு சென்றது. கொக்கு நரி வந்தவுடன், அந்த சுவைமிக்க சூப்பை சிறிய துளை கொண்ட இரண்டு குவளையில் ஊற்றியது. அந்த சூப்பின் வாசனையை முகர்ந்தவுடன் நரிக்கு வாயில் எச்சில் ஊறியது. இன்றைக்கு நல்ல வேட்டை என்று நரி நினைத்தது.
 கொக்கு குவளையை நரியிடம் கொடுத்தது. கொக்கு தன் வாயை குவளையில் நுழைத்து சூப்பை ருசித்தது. நரியினால், துளை சிறியதாய் இருப்பதனால் குடிக்க முடியவில்லை.
 குவளையின் ஓரங்களில் சிதறி இருந்த சிறு துளிகளை மட்டுமே சாப்பிட முடிந்தது. கொக்கு நரியைப் பார்த்து சூப் எப்படி இருந்தது என்று கேட்டது? நரியும், மிகவும் அருமை இதுபோன்ற ஒரு சூப்பை நான் குடித்ததே இல்லை என்று பொய் சொல்லியது.
 அப்போது தான் நரி ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது. நரி, கொக்கிடம் விருந்துக்கு நன்றி என்று கூறிவிட்டு வருத்தத்துடன் சென்றது. அப்போது தான் நரி நாம் மற்றவர்களை ஏமாற்றும் போது அவர்கள் எவ்வாறு வருத்தப்பட்டு இருப்பார்கள் என்று உணர்ந்தது. அன்று முதல் திருந்திய நரி, பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக