Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 4 டிசம்பர், 2019

மொபைல் கட்டணம் உயர்வு... சமாளிக்கும் மத்திய அரசு!

 Image result for mobile tariff rates

மொபைல் சேவைக் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதனால் பாதிப்பு ஒன்றும் இல்லை என்று மத்திய அரசு ஆறுதல் கூறியுள்ளது.

மொபைல் போன்கள் இல்லாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு இந்தியாவில் மொபைல் போன்களின் ஆதிக்கம் உள்ளது. தகவல் தொடர்புக்கு இன்றியமையாதவையாக உள்ள மொபைல் போன்களும், அதற்கு ஆதாரமாக இருக்கும் இணைய இணைப்பும் மலிவான விலையில் மக்களுக்குக் கிடைக்க வேண்டியது அவசியமாகும்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016ஆம் ஆண்டில் இந்திய தொலைத் தொடர்புச் சந்தையில் நுழைந்தபோது டேட்டா, அழைப்புக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என்று அதிரடியாகக் களமிறங்கியது. அதனுடன் போட்டி போடும் வகையில் ஏர்டெல், ஐடியா, வோடஃபோன், ஏர்செல், பிஎஸ்என்எல் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களும் தங்களது மொபைல் சேவைக் கட்டணங்களைக் குறைக்கத் தொடங்கின. ஜியோவுடன் போட்டி போட முடியாமல் இழப்பைச் சந்தித்த சில நிறுவனங்கள் சந்தையை விட்டே வெளியேறின.

ஜியோ வந்தபிறகு மூன்று ஆண்டுகளுக்குள் சந்தையில் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்தது. சந்தையில் பலமாகக் காலூன்றிய பின்னர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மொபைல் கட்டணங்களை உயர்த்தி வருகிறது. இதனால் மற்ற நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்தத் தொடங்கிவிட்டன. வருவாய் இழப்பு அதிகரித்துவிட்டதாலும் மொபைல் கட்டணங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு ஏற்பட்டது.

இதுபோன்ற சூழலில் டிசம்பர் 1ஆம் தேதி மொபைல் கட்டணங்களை நெட்வொர்க் நிறுவனங்கள் 10 முதல் 45 சதவீதம் வரையில் உயர்த்தின. அழைப்பு, டேட்டா கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுபோன்ற சூழலில் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் மொபைல் சேவைக் கட்டணங்கள் குறைவாகத்தான் இருக்கின்றன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில், மத்திய அரசானது தனியார் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், மொபைல் கட்டண உயர்வை ஆதரிப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் உள்ளிட்ட அரசு நிறுவனங்களை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
 
இதற்குப் பதிலளிக்கும் விதமாகவும், மொபைல் கட்டண உயர்வுக்கு விளக்கமளிக்கும் விதமாகவும் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசியுள்ளார். 2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மொபைல் டேட்டா கட்டணங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்தான் மொபைல் கட்டணங்கள் அதிகமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு ஜிபி டேட்டா கட்டணம் ரூ.268.97 ஆக இருந்ததாகவும், இப்போது அது ரூ.11.78 ஆகக் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் மொபைல் கட்டணம் குறைவாக இருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கேபிள்.கோ நிறுவனத்தின் ஆய்வு கூறுவதாகவும், ரவி ஷங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார்.

நெட்வொர்க் நிறுவனங்களின் இழப்புகளைச் சமாளிக்கும் முனைப்பில்தான் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மொபைல் கட்டணங்கள் சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!