Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 8 ஜனவரி, 2020

தோல்வி ஏற்படாமலிருக்க... என்ன செய்ய வேண்டும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்கலாம் வாங்க...!!
பாபு : எப்படிடா உனக்கு தீக்காயம் ஆச்சு?
ராம் : வெடியை பத்த வெச்சப்போ, மழை தூறியதால் வெடி நனையாம இருக்க பக்கத்துல நின்னு குடை பிடிச்சேன் அதான்!
பாபு : 😂😂
-------------------------------------------------------------------------------------------------
மகன் : அம்மா!! சாப்பிட என்ன செஞ்சிருக்க?
அம்மா : ஒன்னும் செய்யலடா...
மகன் : ஒன்னும் செய்யலையா. ஏன் மா?
அம்மா : மீன் குழம்பு செய்யலாம்னு, மீன் வாங்க கடைக்கு போனேன். மீன் காலியாய்டுச்சினு சொல்லிட்டாங்க... அதான் எதுவும் செய்யல...
மகன் : மீன் இல்லனா என்ன? வேற ஏதாவது வாங்கி செய்ய வேண்டியது தானே...
அம்மா : நானும் அப்படிதான் நெனச்சேன்.. ஆனா அந்த கடையில மீனை தவிர வேற எதுவும் விக்கமாட்டோம்னு சொல்லிட்டாங்க..
மகன் : வேற கடைக்கு போய் வாங்க வேண்டியது தானே...
அம்மா : நானும் வேற கடைக்கு போய் மீன் வாங்கிட்டு வந்தேன். ஆனா அந்த கடைக்காரன் ஒரு கவர்-ல தண்ணி ஊத்தி அதுல மீன உயிரோட போட்டு கொடுத்துட்டுட்டான்... அத எப்படி சமைக்கிறதுன்னு எனக்கு தெரியலடா.
மகன் : 😳😳
-------------------------------------------------------------------------------------------------
மாமியார் : எங்க தாத்தா ஐம்பத்தைந்து வயசுல இறந்தாரு, எனக்கு அறுபத்தைந்து வயசு ஆச்சு. நான் இன்னும் உயிரோடதான் இருக்கேன்.
மருமகள் : ரெண்டுமே வருத்தப்படவேண்டிய விஷயம்தான்.
மாமியார் : 😠😠
-------------------------------------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!

தோல்வி ஏற்பட்டவுடன் நமக்கு ஜாதகம் சரியில்லை...
நேரம் சரியில்லை...
வீட்டில் விட்டம் சரியில்லை...
என்றெல்லாம் சொல்லாமல் திட்டம் சரியில்லை என்பதை
புரிந்து கொண்டு செயல்படுங்கள்...
வாழ்வில் வெற்றி நிச்சயம்...
உன் வேலைக்கு நீ தலை வணங்கினால்,
நீ யாருக்கும் தலை வணங்க தேவையில்லை.
அதுவே நீ வேலைக்கு தலை வணங்கா விட்டால்,
நீ அனைவரிடமும் தலை குனிய நேரிடும்.
-------------------------------------------------------------------------------------------------
கொஞ்சம் முயற்சி பண்ணுங்க..!!

கும்பகோணம் குட்டையாம் பாளையத்தில் குடியிருக்கும் குமரேசனின் குமரன் குமரப்பன், குளத்தில் குளிக்கும் போது குளிக்க வந்த குரங்குக் குட்டியை குச்சியால் குத்தினான். குரங்குக் குட்டி குதித்துக் கூப்பாடு போட்டது.

பழுத்த கிழவி கொழுத்த மழையில் வழுக்கி விழுந்தாள்.

சரக்கு ரயிலை குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த முறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை இறங்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!