Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 31 ஜனவரி, 2020

காலையில் விழிக்கும் போது முதலில் எதைப் பார்க்க வேண்டும், நல்ல நாளாக அமைய என்ன செய்ய வேண்டும்?

காலையில் விழிக்கும் போது எதைப் பார்த்தால் நல்லனவை நடக்கும், நாள் மகிழ்ச்சியாக மாறும் மகாலட்சுமியை எப்படி வணங்குவது என்பதைப் பார்ப்போம்...

ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுந்திருக்கும் போது, அன்று நல்ல நாளாக அமைய வேண்டும், மகிழ்ச்சிகரமான நாளாக அமைய வேண்டும் என்று எண்ணுவது வாடிக்கையான ஒன்று.

அந்த வகையில் காலையில் எழுந்த உடன் யாரைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும், எப்படி பார்க்க வேண்டும் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக உள்ளது.

காலையில் எழுந்த உடன் செய்யும் தரிசனத்திற்கும் விழிப்பு தரிசனம் என்று பெயர். அதாவது முதலில் எதை நாம் பார்க்க வேண்டும் என்ற சில விஷயங்கள் உள்ளன. காலையில் எழுந்ததும், எதை நாம் பார்க்கின்றோமோ, அதன் ஞாபகம், தாக்கம் அன்றைய நாள் முழுவதும் இருக்கும்.

இதை புரிய வைக்கும் வகையில் நம் முன்னோர்கள் அருமையான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

காலையில் எழுந்திருக்கும் போது, நல்ல ஒரு அருமையான சுற்றுச்சூழலில் எழுந்திருக்க வேண்டும். அப்படி எழுந்திருக்கும் போது நாம் எதைப் பார்க்க வேண்டும், அதைப் பார்க்க கண்களை மூடிக்கொண்டு எங்கேயும் தட்டுத்தடுமாறிச் செல்ல வேண்டாம்.

நம்முடைய உள்ளங்கை பார்ப்பது தான் மிகச் சிறந்தது. ஏனெனில் நம் உள்ளங்கையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் காலையில் எழுந்ததும், நம்முடைய உள்ளங்கையை பார்ப்பதை பழகிக் கொள்ள வேண்டும்.

எப்படி உள்ளங்கையைப் பார்ப்பது?
நாம் எழுந்ததும், நம் உள்ளங்கைகளை மெதுவாக தேய்த்து, அதை நாம் கண்களில் ஒற்றிக் கொண்டு, மகாலட்சுமியை மனதில் நினைத்துக் கொண்டு, மெதுவாக கண்களை திறந்து உள்ளங்கைகளைப் பார்க்க வேண்டும்.

இதில் பலருக்கு குழப்பிக்கொள்வர். ஒரு கையை பார்ப்பதா, இரண்டு கைகளையும் பார்ப்பதா, வலது கையை பார்ப்பதா, இடது கையை பார்ப்பதா என்ற குழப்பம் வரும்.

அப்படி குழப்பிக் கொள்ள வேண்டாம். எந்தை கையை பார்த்தாலும் சரி, லட்சுமி தேவியை மனதில் நினைத்துக் கொண்டு பார்க்க உங்களின் நாள் அருமையான நாளாக அமையும்.

இதைத்தவிர வேறு என்ன பார்க்கலாம்?

உள்ளங்கையைப் பார்ப்பது சரி, வேறு என்னவெல்லாம் பார்க்கலாம் என்றால், பூரண கும்பம் பார்க்கலாம், கோயில் கோபுரத்தை பார்க்கலாம், கோயில் மணி, பசு மாடு, கன்றுக்குட்டி, இயற்கை அழகு, இயற்கை காட்சி, அருவிகள், மலர்கள், அர்ப்புதமான இசைக்கருவிகள், மங்களகரமான பொருட்களான மஞ்சள், குங்குமம், விபூதி உள்ளிட்ட பொருட்களைப் பார்க்கலாம்.

இயற்கைக் காட்சி பார்க்க முடியாவிட்டாலும், அதன் புகைப்படங்களையாவது பார்த்துக்கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல் கணவன் மனைவியின் முகத்திலும், மனைவி கணவன் மனைவி முகத்திலும் விழிக்கலாம். பெற்றோர்கள் குழந்தையின் முகத்திலும், குழந்தைகள் பெற்றோர், பெரியோரின் முகத்திலும் விழிக்கலாம். இவையும் காலையில் விழிப்பு தரிசனத்திற்கு மிகச்சிறந்தவைகள் தான்.

இப்படி மங்கலம் நிறைந்தவற்றைப் பார்க்க அந்த நாள் முழுவதும் இன்பமும், மகிழ்ச்சியும் நிறைந்த மிகச்சிறப்பான நாளாக அமையும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

இப்படி காலையில் எழுந்த உடன் நல்லனவற்றைப் பார்த்து வாழ்க்கையில் நல்லனவை நடக்கட்டும் என வாழ்த்துகிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!