Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 31 ஜனவரி, 2020

அடுத்தவர் மனைவியை விரும்பினால் கருட புராணத்தின்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?



றந்த பிறகு பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கமும் நரகமும் கிடைக்கும். அதில் என்ன பாவங்ள் செய்தவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என கருட புராணத்தை அடிப்படையாக வைத்துத் தெரிந்து கொள்வோம்.
கருட புராணம்
இந்து மதத்தைப் பொருத்தவரையில், சைவ மற்றும் வைணவ புராணங்கள் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமாகக் கருதப்படுவது தான் கருட புராணம். கருட புராணம் என்பது என்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பரம்பொருளாகிற விஷ்ணு பகவான் தன்னுடைய வாகனமாக கருட வாகனத்தில் ஏறி உலகை வலம் வந்து கொண்டிருந்மதராம். அப்போது அவருடைய வாகனமாக கருடன் திரும்பி விஷ்ணுவைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாராம்.
எம்பெருமானே! மனிதர்களின் இறப்புக்குப் பின்னர் என்ன தான் நடக்கும் என்று கேட்டாராம். அந்த கருடனின் கேள்விக்கு விஷ்ணு பகவான் சொன்ன பதில் தான் கருட புராணம்.
என்ன சொல்கிறது?
தன்னுடைய வாகனமான கருடனின் கேள்விக்கு விஷ்ணு பகவான் சொன்ன பதில் தான் கருட புராணம் என்பது நமக்குத் தெரிந்தது தான். அப்படி அந்த கருட புராணத்தில் என்னென்ன சொல்லியிருக்கிறார் விஷ்ணு என்று தெரியுமா?
கருட புராணத்தில் மனிதன் இறந்த பிறகு, அவர்களுடைய உடலில் இருந்து பிரிந்த உயிரானது, எங்கு செல்கிறது, என்ன செய்கின்றது, சொர்க்கம் நரகம் போன்ற விஷயங்களும், சொர்க்கத்துக்கு யாரெல்லாம் போவார்கள், நரகத்துக்கு யார் செல்வார்கள் என்றெல்லாம் விளக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.
கருட புராணத்தின் உள்ளடக்கம்
கருட புருாணம் என்பது விஷ்ணு பகவானும் அவருடைய வாகனமான கருடனும் உரையாடிக் கொள்வது. கருட புராணம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று உலக உயிர்களின் மரணத்துக்குப் பின்பாக உள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள்ஈ மறுபிறவி ஆகியவற்றைப் பற்றி விரிவாக விளக்குகிறது.
அதோடு மட்டுமல்லாது, வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தினக் கட்டமைப்புகள் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது. இவற்றில் மொத்தம் பத்தொன்பதாயிரம் செய்யுள்கள் கொண்டது. இதன் இரண்டு பிரிவுகளையும் பூர்வ கந்த மற்றும் உத்தர கந்தம் என இரண்டாகப் பிரிக்கலாம்.
பாவமும் தண்டனையும்
உலக உயிர்கள் பூலோகத்தில் வாழுகின்ற பொழுது, செய்கின்ற பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கமும் நரகமும் கிடைக்கும் என்பதும், நரகத்திற்குச் செல்கின்றவர்கள் பல்வேறு விதவிதமான தண்டனைகளைப் பெறுவார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் என்னென்ன பாவங்களுக்கு எ ன்னென்ன தண்டனைகள் என்ற விவரங்கள் நமக்குத் தெரிவதில்லை. அது பற்றி மிக விளக்கமாக கருட புராணம் சொல்கிறது.
அடுத்தவர் மனைவியை விரும்பினால்...
அடுத்தவர்களுக்குச் சொந்தமான, மற்றவர்களுடைய மனைவியை விரும்புதல் அல்லது அபகரிப்பு செய்வது, அடுத்தவர்களுடைய குழந்தையைப் பறித்துக் கொள்ளுதல், மற்றவர்களுடைய பொருள்களை ஏமாற்றிப் பறித்துக் கொள்ளுதல் போன்ற பாவங்களைச் செய்வதும் மிகப்பெரிய குற்றமாகச் சொல்லப்படுகிறது. அஇந்த குற்றங்களைச் செய்தால், அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனையின் பெயர் என்ன தெரியுமா? அந்த தண்டனையின் பெயர் தாமிஸிர நரகம்.
தாமிஸிர நரகம்
தாமிஸிர நரகம் என்னும் தண்டனை என்பது, எமலோக நரகத்தில் எமதர்மரின் பணியாட்களாக இருக்கிற எமகிங்கரர்கள் புடைசூழ்நது, பெரிய பெரிய முட்களால் ஆன கட்டைகளாலும் பெரிய பெரிய கதைகளாலும் அடித்துக் கொடுமைப்படுத்துவார்கள். இதுதான் தாமிஸிர நரகம் என்னும் தண்டனையின் விவரங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக