Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 ஜனவரி, 2020

இதற்கு இதுதான் அர்த்தமா?... காத்துக்கொண்டிருக்கிறது... படிச்சு பாருங்க...! சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

பாபு : பக்கத்து அபார்ட்மெண்டுல போன வாரம் 3வது மாடியிலே திருட்டுப் போச்சு... நேத்து ரெண்டாவது மாடியிலே.
ராஜ் : அப்போ திருட்டு படிப்படியா குறைஞ்சுட்டு வருதுன்னு சொல்லுங்க..!
பாபு : 😂😂
------------------------------------------------------------------------------------------------
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...!!

தன் சட்டைப் பையினுள் இருந்து அழகான புதிய செல்போனை எடுத்த அந்த இளைஞன், கடற்கரையில் அமர்ந்திருந்த காதலியிடம் நீட்டி சொன்னான்.

அன்பே...💕 இந்த செல்போன் உனக்குதான்... வைத்துக்கொள்.

பளபளப்பான அந்த செல்போனை வைத்த கண்😍 வாங்காமல் பார்த்த காதலி அவனிடம் கேட்டாள்.

இது எனக்குதானா? என் மீது இவ்வளவு அன்பா? விலை அதிகமாக இருக்குமே! எங்கே வாங்குனீங்க?

காதலன் சிரித்துக்கொண்டே 😄 பதிலளித்தான் இது வாங்கியதில்லை. ஓட்டப்பந்தயத்தில் பரிசாகக் கிடைத்தது.

தன் காதலன் ஓட்டப்பந்தய வீரன் என்பதை அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தாள்.

ஓட்டப்பந்தயத்தில் எத்தனை பேர் ஓடுனீங்க? டார்லிங்.😍😍

காதலன் பெருமையாகச் சொன்னான்.😌😌

மூன்று பேர். நான்🙋‍️ செல்போன் கடைக்காரன்📱 ஒரு போலீஸ்👮.
------------------------------------------------------------------------------------------------
என்ன வித்தியாசம்?

வெயில் காலத்திற்கும், பனிக்காலத்திற்கும் நூல் அளவுதான் வித்தியாசம்.

எப்படா குளிக்க போறோம்னு யோசிச்சா அது வெயில் காலம்...

ஏன்டா குளிக்க போறோம்னு யோசிச்சா அது பனிக்காலம்...
------------------------------------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

பொருள் :

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
------------------------------------------------------------------------------------------------

இது எப்படி இருக்கு...?

1. கிணத்துல கல்லை போட்டா
கல்லு ஏன் மூழ்குது?
ஏன்னா அதுக்கு நீச்சல் தெரியாது.😌😜

2. பொங்கலுக்கும், தீபாவளிக்கும் என்ன வித்தியாசம்?
தீபாவளிக்கு பொங்கலை சாப்பிடலாம்...
ஆனா, பொங்கலுக்கு தீபாவளிய சாப்பிட முடியாது.😌😜
------------------------------------------------------------------------------------------------
இதற்கு இதுதான் அர்த்தமோ?

நம்முடைய ஒவ்வொரு குற்றத்திற்கும் அவ்வப்போதே தண்டனை கிடைக்கவில்லை என்றால்,
நாம் புத்திசாலி என்றோ, இறைவன் இல்லை என்றோ அர்த்தம் இல்லை...
நமக்கான தண்டனைகள் கடுமையாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்...
------------------------------------------------------------------------------------------------

இவை எதற்காக?
தனிமைகள் கிடைப்பது உன்னை நீ தெரிந்துகொள்ள...

தவறுகள் நடப்பது உன்னை நீ திருத்திக்கொள்ள..

முயற்சிகள் எடுப்பது உன்னை நீ முன்னேற்றிக்கொள்ள...

எதிரிகள் கிடைப்பது உன்னை நீ வளர்த்துக்கொள்ள...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக