Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 2 ஜனவரி, 2020

சின்னத்தை மட்டும் கிழித்துச் செல்லாத ஓட்டை போட்ட கிராம மக்கள்!

வாக்குச் சீட்டில் வழங்கப்பட்ட அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட சின்னங்களில், ஆதரவு அளிக்கும் சின்னத்தை மட்டும் கிழித்து வாக்குப் பெட்டியில் பதிவு செய்த கிராம மக்கள்.


தமிழ்நாட்டில் 3 ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்ற உத்தரவுக் காரணமாக இப்போது தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் பெரிய இடைவெளிக்குப் பின் நடப்பதால், பல்வேறு தரப்பினரிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 2 லட்சத்து 31ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 27ஆம் தேதி பதிவான முதல் கட்ட வாக்குப் பதிவில் 76.19 சதவீத வாக்குகள் பதிவாகியது. தொடர்ந்து 30ஆம் தேதி நடந்த 2ஆம் கட்ட வாக்குப் பதிவின் போது 77.73 சதவீத வாக்குகள் பதிவானது. இதன்மூலம் சராசரியாக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்பதை அறிய முடிகிறது.

 கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்களை ஒப்பிடுகையில், இப்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக முடிந்ததாகக் கூறப்படுகிறது. தேர்தல் நடந்தபோது ஆங்காங்கே நடந்த குளறுபடிகள், மாவட்ட தேர்தல் அதிகாரியாலும், பறக்கும் படைகளாலும் விரைந்து தீர்த்து வைக்கப்பட்டன.

இந்த சூழலில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் தாமதமாகத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதே நேரத்தில் வாக்குப் பெட்டிக்குள் வாக்குச் சீட்டுகள் துண்டு துண்டாகக் கிடந்த அவலமும் கண்டறியப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி செட்டி நாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்து வாக்குப் பெட்டிகளைத் திறந்த தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து ஒரே மாதிரியான துண்டுகளாகவே சம்பந்தப்பட்ட வாக்குப் பெட்டியில் வாக்குச் சீட்டுகள் இருந்துள்ளது.

இதனால், எதற்காக இப்படி வாக்குப் பெட்டிக்குள் வாக்குச் சீட்டுகளைப் போட்டுள்ளனர் என அதிகாரிகள் ஆராய்ந்து பார்த்தனர். அதன் மூலம், சீலப்பாடி செட்டி நாயக்கன்பட்டி கிராம மக்கள் பெரும்பாலானோர் வாக்களிக்க ஆர்வம் காட்டிய சின்னத்தை மட்டும் கிழித்து வாக்குப் பெட்டிக்குள் பதிவு செய்தது புரிந்தது.

எனினும், அனைத்துமே செல்லாத வாக்குகளே ஆகும். நகைப்புக்குரிய சம்பவமாக இந்த சம்பவம் பார்க்கப்பட்டாலும், வாக்களித்த மக்களுக்குச் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் முறையாக வழிமுறைகளை விளக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!