>>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 4 ஜனவரி, 2020

    யாருக்கு என்ன யோகம்? என்ன பலன்?

     Image result for யாருக்கு என்ன யோகம்? என்ன பலன்?
     ஸ்ரீநாத யோகம் :

     க்னத்திற்கு நான்கு, ஏழு மற்றும் பத்தாம் இடங்களில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து அமைந்திருப்பதால் உண்டாவது ஸ்ரீநாத யோகம் ஆகும்.

     ஸ்ரீநாத யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     சகல சௌபாக்கியமும் பெற்று வாழக்கூடியவர்கள்.

     சிலர் இல்லற வாழ்க்கையை துறந்து சந்நியாசி வாழ்க்கை வாழக்கூடியவர்.

     கனக யோகம் :

     லக்னம் சரமாக அமையப்பெற்று ஐந்து மற்றும் பத்தாம் அதிபதிகள் பலமாக கேந்திரத்தில் நான்கு, ஏழு மற்றும் பத்தாம் வீடுகளில் அமையப்பெற்றால் உண்டாவது கனக யோகம் ஆகும்.

     கனக யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     நினைத்தவை யாவையும் அடையும் வல்லமை உடையவர்கள்.

     ரவி யோகம் :

     சூரியனுக்கு இருபுறமும் சுப கிரகங்கள் அமையப்பெறுவது ரவி யோகம் ஆகும்.

     ரவி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     சாதனைகளை படைக்க வல்லவர்கள்.

     உயர் பதவி அடையக் கூடியவர்கள்.

     புகழ், பெருமை உடையவர்கள்.

     சரஸ்வதி யோகம் :

     குரு, சுக்கிரன், புதன் லக்னத்திற்கு கேந்திரத்தில் அதாவது நான்கு, ஏழு மற்றும் பத்திலோ அல்லது திரிகோணத்திலோ இருப்பின் சரஸ்வதி யோகம் உண்டாகிறது.

     சரஸ்வதி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     பிறரால் மதிக்கப்படுவார்கள்.

     உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

     எழுத்தாளராகவும், பேச்சாளர்களாகவும் விளங்கக்கூடியவர்கள்.

     சங்க யோகம் :

     ஐந்து மற்றும் ஆறாம் அதிபதிகள் இணைந்து ஒரே வீட்டில் இருப்பினும் அல்லது ஒருவருக்கொருவர் ஏழாம் பார்வையால் பார்த்து கொண்டாலும் சங்க யோகம் உண்டாகிறது.

     சங்க யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     உயர் கல்வி கற்ககூடியவர்கள்.

     நீண்ட ஆயுள் உடையவர்கள்.

     நிலையான புகழ் கொண்டவர்கள்.

     சாதனைகள் புரிவதில் வல்லவர்கள்.

     ராஜ யோகம் :

     ஒன்பதாம் அதிபதி குரு பார்வை பெற்று ஆட்சி பெற்றால் ராஜ யோகம் உண்டாகிறது.

     ராஜ யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     சகல சௌபாக்கியத்துடன் வாழக்கூடியவர்கள்.

     வசுமதி யோகம் :

     லக்னத்துக்கு மூன்று, ஆறு மற்றும் பதினொன்றாம் அதிபதிகள் பலம் பெற்று இருந்தால் வசுமதி யோகம் உண்டாகும்.

     வசுமதி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     பொருட்செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்களாக இருப்பார்கள்.

     உயர்ந்த அந்தஸ்து, பெருமை, புகழ் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

     பூமி பாக்கிய யோகம் :

     நான்கு மற்றும் ஒன்பதாம் அதிபதிகள் மறைவு ஸ்தானங்களில் அமராமலும், நீசம் பெறாமலும் மற்றும் பாபர் சேர்க்கை இல்லாமலும் இருப்பதால் அமைவது பூமி பாக்கிய யோகம் ஆகும்.

     பூமி பாக்கிய யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     மனை சேர்க்கை உண்டாகும்.

     செல்வங்கள் நிலைத்து நிற்கும்.

     லட்சுமி யோகம் :

     ஒன்பதாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெறுவதால் உண்டாவது லட்சுமி யோகம் ஆகும்.

     லட்சுமி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     லட்சுமி கடாட்சம் பெற்று வாழ்வார்கள்.

     எதிர்பாராத செல்வ செழிப்பு உண்டாகும்.

     பாபகத்ரி யோகம் :

     லக்னமோ அல்லது மதியோ(சந்திரன்) இரு அசுப கிரகங்களுக்கு இடையில் அமர்ந்திருக்க உண்டாவது பாபகத்ரி யோகம் ஆகும்.

     பாபகத்ரி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     செல்வ செழிப்புடன் இன்னல்கள் கொண்ட வாழ்க்கை இருக்கும்.

     தரித்திர யோகம் :

     ஒன்பதாம் அதிபதி (பாக்யாதிபதி) பனிரெண்டாம் வீட்டில் மறைவு பெற்றால் உண்டாவது தரித்திர யோகம் ஆகும்.

     தரித்திர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     பிறருக்கு உதவி செய்து அவச்சொல் வாங்குதல்.

     நிலையான செல்வம் இல்லாமை.

     வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கும்.

     அந்திய வயது யோகம் :

     லக்னாதிபதி மற்றும் இரண்டாம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும், லக்னத்தில் அமர்ந்தாலும் உண்டாவது அந்திய வயது யோகம் ஆகும்.

     அந்திய வயது யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     இளமையில் துன்பம் நிறைந்த வாழ்க்கை அமையும்.

     பிற்காலத்தில் உயர் பதவி பெற்று பெருமையுடனும், கீர்த்தியுடனும் வாழ்வார்கள்.

     திரிலோசனா யோகம் :

     சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் கேந்திர திரிகோண வீடுகளில் அமைவதால் உண்டாவது திரிலோசனா யோகம் ஆகும்.

     திரிலோசனா யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     எதிரிகளை வெற்றி கொள்வார்கள்.

     மிகுந்த செல்வம் மற்றும் நீண்ட ஆயுள் கொண்டவர்கள்.

     பர்வத யோகம் :

     லக்னாதிபதி நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெறுவது அல்லது லக்னத்திற்கு கேந்திர அதிபதிகள் பலம் பெற்றாலும் அமைவது பர்வத யோகம் ஆகும்.

     பர்வத யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     உலகம் போற்றும் அளவுக்கு புகழ், பெருமை உடையவர்கள்.

     அரச யோகம் :

     மதியானவன் லக்னத்திற்கு கேந்திரத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அந்த மதியை சுக்கிரன் மற்றும் குரு பார்வை பெற்றால் அரச யோகம் உண்டாகும்.

    அரச யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

    அரசாளும் யோகம் உண்டாகும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக