
இந்த உலகத்தில் மனிதர்கள் அனைவருக்கும் பிடித்தமான அதேசமயம்
அவசியமான ஒரு விஷயம் என்றால் அது தூக்கம்தான். இந்த உலகத்தின் அனைத்து
தொந்தரவுகளில் இருந்து காப்பாற்றி மனிதர்களுக்கு நிம்மதியை வழங்குவது தூக்கம்தான்.
தூக்கம் நமது மனஆரோக்கியம் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் அத்தியாவசியமான
ஒன்றாகும்.
ஒரு நாள் எப்படிப் போக போகிறது என்பது
அதற்கு முந்தைய இரவின் தூக்கத்தை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. நமது
ஆரோக்க்கியத்தைப் பாதிக்கும் பல பிரச்சினைகளுக்கு தூக்கமின்மை ஒரு முக்கியக்
காரணமாக இருக்கிறது. தூங்காமல் இருப்பதால் வரும் நோய்கள் ஒரு ரகம் என்றால்
தூக்கத்தாலேயே வரும் நோய்கள் ஒரு ரகமாகும். தூங்கும்போது நமக்கு வரும் குறைபாடுகள்
மிகவும் விசித்திரமானவையாகும். இந்த பதிவில் தூக்கத்தில் ஏற்படும் சில விசித்திர
நோய்களை பார்க்கலாம்.
தூக்கத்தில் ஏற்படும் விசித்திரமான
நோய்கள் என்னென்ன தெரியுமா? உங்களுக்கு இதுல ஏதாவது இருக்கா....
இது மிகவும் வினோதமான தூக்கக்
கோளாறுகளில் ஒன்றாகும், இதில் பாதிக்கப்பட்டவர் தூக்கத்தில் பற்களைப் பிடுங்கவோ
அல்லது அரைக்கவோ முனைகிறார். பொதுவாக மன அழுத்தம், பதட்டம் அல்லது அடக்கப்பட்ட
கோபம் காரணமாக இது ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தூக்கத்தில் மூச்சு நிற்பது
இது மிகவும் ஆபத்தான குறைபாடுகளில்
ஒன்றாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தூங்கும்போது அதிக சிரமத்திற்கு
ஆளாவார்கள். சிறிது நேரம் இதனை கவனிக்காமல் விட்டால் இது பக்கவாதத்திற்கு
வழிவகுக்கும். அதிக எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம் அல்லது புகைபிடித்தல்
ஆகியவற்றால் இந்த கோளாறு ஏற்படலாம்.
தூக்கத்தில் நடப்பது
இந்த நிலை
"சோம்னாம்புலிசம்" என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வேடிக்கையான,
பாதிப்பில்லாத நிலையாகும். இந்த பாதிப்பில் இருந்து குறிப்பிட்ட வயதிற்கு பிறகு
பாதிக்கப்பட்டவர் வெளிவந்துவிடுவார். இது வழக்கமாக தூக்க மூச்சுத்திணறல் அல்லது
வலிப்புத்தாக்கங்கள் போன்ற ஒரு அடிப்படை பிரச்சினையால் ஏற்படுகிறது, ஆனால் இது
பொதுவாக ஆபத்தான குறைபாடாக கருதப்படுவதில்லை.
நார்கோலெப்ஸி
இது உடனடி கவனம் தேவைப்படும் மற்றொரு
தீவிர நிலை. இதனால் அவதிப்படுபவர்கள் திடீர் தூக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். இது
நாளின் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நிகழலாம். இது ஒரு அபூர்வமான நோயாகும்.
இது ஒரு மரபணு கோளாறால் ஏற்படும் நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் இவர்கள் எப்பொழுது தூக்கத்தில்
விழுவார்கள் என்பது இவர்களுக்கேத் தெரியாது.
அமைதியற்ற கால்கள்
இந்த குறைபாடு உள்ளவர்கள் இந்த
குறைபாடு உள்ளவர்கள் குத்தும் மற்றும் கூச்ச உணர்வில் இருந்து நிவாரணம் பெற
கால்களை அசைத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த நிலை இரவில் அதிகம்
காணப்படுவதாகவும், காலையில் அது குறையும் என்றும் ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
அதிக உறக்கம்
இது ஒரு அரிய நிலைமைகளில் ஒன்றாகும்,
இதில் நோயாளி இடைவெளியே இல்லாமல் குறைந்தது 18 மணிநேரம் தூங்குவார். தற்போது, இது
உலகம் முழுவதும் சில நூறு பேரை மட்டுமே பாதித்து உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.
தூக்க காலம் 18 மணி முதல் சில வாரங்கள் வரை நீடிக்கும் என்று மருத்துவர்கள்
கூறுகிறார்கள்.
பாதி உறக்கம்
இது REM என்று அழைக்கப்படும் தூக்க
நடத்தைக் கோளாறு ஆகும். இந்த நிலை ஒரு நபர் தூங்கும் போது மிகவும் தெளிவான கனவுகளை
வெளிப்படுத்துகிறது. இந்த நிலை பெரும்பாலும் தூக்க நடைபயிற்சி, தூக்க நடுக்கம்
போன்றவற்றால் குழப்பமடைகிறது. இந்த நிலையில், நபர் தூக்கத்தில் வன்முறையில்
ஈடுபடுகிறார், மேலும் அவர் சண்டையிடுவது போன்ற செயல்களைச் செய்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக