Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 10 ஜனவரி, 2020

இது சிரிக்க மட்டுமே...!!

இது சிரிக்க மட்டுமே...!!

நோயாளி : டாக்டர் எனக்கு சுகரும், மனைவியும் ஒன்னுதான்...
டாக்டர் : எதனால அப்படி சொல்றீங்க?
நோயாளி : இரண்டையும் என்னால Control பண்ணவே முடியல..
டாக்டர் : 😝😝
----------------------------------------------------------------------------------------------------------
கணவன் : நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்-னு தான சொன்னான், அதுக்கு நீ ஏண்டி முழிக்கிற?
மனைவி : அவன் சொன்னது, எல்லா பாடத்திலும் ஒரு மார்க் வாங்கியிருக்கிறத.
கணவன் : 😦😦
----------------------------------------------------------------------------------------------------------

மனைவி : ரோஸி‌ங்கிறது யாரு‌ங்க?
கணவன் : ‌அது கு‌திரைப் ப‌ந்தய‌த்‌தி‌ல நான் பணம் கட்டு‌ற குதிரையோட பெயர், ஏ‌ன் கேட்குற?
மனைவி : அப்படியா, அந்த குதிரை இன்னைக்கு மதியம் உங்களுக்கு போன் ப‌ண்ணு‌ச்சு.. அதா‌ன் கே‌ட்டே‌ன்.
கணவன் : 😯😯
----------------------------------------------------------------------------------------------------------

பிறரை ஏமாற்றாதே...!!
ஹரி மற்றும் சக்தி இரண்டு நண்பர்களும் பணம் சம்பாதிக்க நகரத்திற்கு சென்றனர். அவர்கள் வேலையை தேடி ஒரு பணக்கார வியாபாரியிடம் சென்றனர். வியாபாரி அவர்கள் இருவரிடமும் ஒரு வாளியை கொடுத்து, தோட்டத்தில் உள்ள கிணற்றை காண்பித்து, அந்த கிணற்றில் உள்ள தண்ணீரை இரைக்கச் சொன்னார்.

வாளியில் தண்ணீரை இரைப்பது மூட்டாள்தனமான செயல் என்று நினைத்து அவன் தூங்கிவிட்டான். மறுபுறம், சக்தி கிணற்றில் இருந்த தண்ணீரை இரைத்துக் கொண்டிருந்தான். சில மணி நேரம் கழித்து, வாளியை கிணற்றில் இருந்து இரைத்தபோது வாளியில் சில தங்க நாணயங்கள் இருப்பதை கவனித்தான்.

சக்தி தங்க நாணயங்களை எடுத்துக் கொண்டு வியாபாரியிடம் சென்றான். வியாபாரியும் அவனை பாராட்டி அவனுக்கு வேலையையும் அளித்தார். இதைக் கண்ட ஹரி மிகவும் வெட்கமடைந்து தன்னுடைய தவறை உணர்ந்தான்.

நீதி : மற்றவர்களை ஏமாற்றாதீர்கள், பிறகு நீங்களே ஏமாற்றப்படுவீர்கள்.
----------------------------------------------------------------------------------------------------------

நீங்களே சொல்லுங்க... இதெல்லாம் உண்மைதானே!!
😝 துவைத்து போட்ட துணியெல்லாம் ஒரு மணி நேரத்துல காஞ்சிருது..
ஆனா, குளிச்சுட்டு போட்ட சட்ட, ஒரு மணி நேரத்துல நனஞ்சிருது..

👀 மனைவி இல்லை, நிம்மதி என்று நகைச்சுவை ஆயிரம் பேசினாலும்.. வீட்டில் நுழைந்தவுடன் மனைவியை காணாமல் ஏங்கி தேடும் கண்கள் ஏராளம்...

👍 எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் வெளிய காட்டக்கூடாது..
ஏன்னா நம்ம கஷ்டத்த பாத்து சந்தோஷப்பட நாலுபேரு இருக்காங்க...
----------------------------------------------------------------------------------------------------------
சிரிக்க சிந்திக்க சில வரிகள் !!
மனித உறவுகளுக்குள் இடைவெளியை அதிகப்படுத்திய இரண்டு கருவிகள் - டிவியும் செல்போனும் தான்...

பத்து பேரோட சேர்ந்து பொய்யா சிரிக்கிறதுக்கு பதிலா தனிமையில உண்மையா அழுவது அசிங்கம் இல்ல..

பிரியாணில முட்டைய காணோம்னு அரண்டுட்டேன்... அப்புறம் பாத்தா பிரியாணிக்கு உள்ள இருக்கு... எதுக்குதான் ஒளிச்சு வக்கிறாங்களோ..?

முப்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு சுடிதாரை தடைசெய்ய வேண்டும். யாரு பாட்டி, யாரு பேத்தினே தெரியலங்கோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!