Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 17 பிப்ரவரி, 2020

1, 500 குடும்பங்களுக்குக் கழிவு நீர் வினியோகம், கண்டு கொள்ளாத சென்னை மாநகராட்சி!




தென் சென்னையில் கோவிலம்பாக்கம் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் கிடைப்பதில் பல மாதங்களாகத் தடை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் பல முறை புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுக் கொள்வதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தென் சென்னை கோவிலம்பாக்கம் சுன்னாமு கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடிநீரில், கழிவு நீர் கலந்து வருவதால் அடிப்படைத் தேவைக்காகக் கடந்த நாட்களில் தொடர்ந்து போராடி வருகின்றனர். இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் மனுக்களும் அளித்துள்ளனர். எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தென் சென்னையில் உள்ள நாராயணபுரம் ஏறி முதல் கீழ்கட்டளை வரை 4 கிமீ தூரத்திற்குக் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீரை நம்பி சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. குறிப்பாக இந்த குடிநீர் குழாய்கள் காகிதபுரம், எல்ஐசி காலணி, இன்ஜியர்ஸ் அவன்யூ, மணிமேகலை நகர், பாக்கியலஷ்மி நகர், ராஜா நகர், கிருஷ்ணா நகர் மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது.

இந்த பகுதி மக்கள் முன்பு மேற்கொண்ட முயற்சியால், 2014ஆம் ஆண்டு ரூ. 75 கோடி செலவில் பாதாளச் சாக்கடைகள் அமைக்கப்பட்டது. இந்த பாதாளச் சாக்கடை திட்டத்தின் மூலம் சுமார் 18 மில்லியன் கழிவுகள், இந்த பகுதி வீடுகளிலிருந்து பெருங்குடி சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது.
 
இந்த பெருங்குடியில் கழிவு நீர்களைச் சுத்திகரிப்பு செய்து, அதன் கழிவுகளை வெளியிடும் பகுதியில் கோளாறு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இதனால் இந்த கழிவு நீர், குடிநீர் குழாய்களுக்குள் சென்று வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரை மாசடையச் செய்துவிடுகிறது என அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

“மேடவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள குடிநீர் குழாய்களில் சட்ட விரோதமாகக் கழிவு நீர் கலக்கப்படுவது உண்மைதான் என மாநகராட்சி ஒப்புக் கொண்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ள குடியிருப்பு பகுதியினர் அறிவிப்பு ஒன்றைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.

 கழிவு நீர், குடிநீர் குழாயில் கலப்பதை உடனடியாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதியினர் முன் வைக்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்” என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!