Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

எல்லாம் கூட்டுக் களவாணிகளா? போலி நகையால் இத்தனை லட்சம் போச்சே - வங்கிக்கே டாட்டா காட்டிய கும்பல்!

தொழில் கூட்டுறவு வங்கியில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நகை மோசடி நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் போலி நகைகளை வைத்து ரூ.94 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாநகரின் நான்கு வழிச்சாலை அருகே தொழில் கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சமீபத்தில் நகைகள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நகை மதிப்பீட்டாளர் சக்திவேல், நகை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் சிலர் வருகை புரியவில்லை.

இதனால் வங்கி கிளை மேலாளர் தெய்வமணிக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே இதுபற்றி தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அவர்களது உத்தரவின் பேரில் சீலிட்டு வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்தனர். இதில் வங்கியை சேர்ந்த குழு ஈடுபட்டது. இந்த ஆய்வில் 24 பேரின் பெயரில் 4 கிலோ போலி நகைகள் அடமானம் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதன்மூலம் ரூ.94 லட்சம் மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டது. உடனே இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி நகை மதிப்பீட்டாளர் சக்திவேல் உள்ளிட்ட 25 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவான சக்திவேலை காவல்துறையினர் தேடிக் கொண்டிருக்கின்றனர். இதில் போலீசாருக்கு இருவிதமான சந்தேகங்கள் எழுந்துள்ளது.

அதாவது வாடிக்கையாளர்களுக்கு சக்திவேல் உதவி செய்தாரா? அல்லது வாடிக்கையாளர்களின் பெயரில் சக்திவேலே மோசடி செய்துள்ளாரா? என்பது தான்.

இந்த விவகாரம் தொடர்பாக தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தங்களுடைய நகைகள் கூட்டுறவு வங்கியில் பத்திரமாக இருக்கிறதா என்று பிற வாடிக்கையாளர்கள் வங்கி அதிகாரிகள் உதவியுடன் தெரிந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக