Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

எதிர்பார்ப்பில் ஆரம்பித்து... எதார்த்தத்தில் முடியும்... இதற்கு பெயர்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


சிரிக்கலாம் வாங்க...!!

சீலா : எவ்வளவு பட்டாலும் என் புருஷனுக்கு புத்தியே வரமாட்டேங்குது..
ராணி : ஏன்?
சீலா : பூரிக்கட்டைய இரும்புல வாங்கிக்கிட்டு வந்திருக்கிறாருன்னா பாரேன்...
ராணி : 😂😂
---------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் : மீன் பேசாது ஏன் தெரியுமா?
மாணவன் : உங்க தலைய தண்ணிக்குள்ள அமுக்குனா பேசுவீங்களா சார்?...
ஆசிரியர் : 😩😩
---------------------------------------------------------------------------------------------------
அப்பாவிற்கு என்ன தெரியும்?
தந்தை பற்றி மகன்...

5 வயது : என் தந்தையால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை...

7 வயது : என் தந்தைக்கு பல விஷயங்களை பற்றி நன்கு தெரியும்...

10 வயது : என் தந்தைக்கு சில விஷயங்களை பற்றி தெரியாது...

12 வயது : என் தந்தைக்கு ஒன்றுமே தெரியாது...

14 வயது : அவரா? அவருக்கு காலம் மாறியது தெரியாது...

21 வயது : கிடக்கிறார் அவர்... அவரிடம் சென்று யோசனை கேட்பதா?

35 வயது : அவருக்கு ஏதோ கொஞ்சம் தெரியும்...

40 வயது : அவர் என்ன நினைக்கிறார்? என்பதை கேட்பதில் தப்பில்லையே...

45 வயது : அவரின் யோசனையை கேட்டு முடிவெடுக்கலாமே...

50 வயது : என் தந்தை இது போன்ற விஷயங்களில் எப்படி முடிவு எடுப்பார் தெரியுமா?

55 வயது : அவர் இல்லாதது உண்மையிலேயே பெரிய கஷ்டமாக இருக்கிறது.

60 வயது : அவருடைய அறிவும், அனுபவமும் எங்கே? நான் எங்கே?
---------------------------------------------------------------------------------------------------


இது எப்படி இருக்கு?
வாழ்க்கை Normal-லா போனா
வழியில குறுக்க வர்ற
நாயைக் கூட கண்டுக்காதே...

வாழ்க்கை Serious-ஆ போனா
வழியில குறுக்க வர்ற
சிங்கத்தைக்கூட விட்டுவிடாதே...
---------------------------------------------------------------------------------------------------
ஹா... ஹா... சிரிக்க மட்டுமே...!!
நாலு வகை சட்னி தினமும் கிடைக்கும்
என எதிர்பார்ப்பில் ஆரம்பித்து...
நாலு நாளா ஒரே சட்னியை
வச்சு சாப்பிடும் எதார்த்தத்திற்கு பெயர்தான் திருமணம்...
---------------------------------------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.

விளக்கம் :

பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணி பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக