>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

    எதிர்பார்ப்பில் ஆரம்பித்து... எதார்த்தத்தில் முடியும்... இதற்கு பெயர்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


    சிரிக்கலாம் வாங்க...!!

    சீலா : எவ்வளவு பட்டாலும் என் புருஷனுக்கு புத்தியே வரமாட்டேங்குது..
    ராணி : ஏன்?
    சீலா : பூரிக்கட்டைய இரும்புல வாங்கிக்கிட்டு வந்திருக்கிறாருன்னா பாரேன்...
    ராணி : 😂😂
    ---------------------------------------------------------------------------------------------------
    ஆசிரியர் : மீன் பேசாது ஏன் தெரியுமா?
    மாணவன் : உங்க தலைய தண்ணிக்குள்ள அமுக்குனா பேசுவீங்களா சார்?...
    ஆசிரியர் : 😩😩
    ---------------------------------------------------------------------------------------------------
    அப்பாவிற்கு என்ன தெரியும்?
    தந்தை பற்றி மகன்...

    5 வயது : என் தந்தையால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை...

    7 வயது : என் தந்தைக்கு பல விஷயங்களை பற்றி நன்கு தெரியும்...

    10 வயது : என் தந்தைக்கு சில விஷயங்களை பற்றி தெரியாது...

    12 வயது : என் தந்தைக்கு ஒன்றுமே தெரியாது...

    14 வயது : அவரா? அவருக்கு காலம் மாறியது தெரியாது...

    21 வயது : கிடக்கிறார் அவர்... அவரிடம் சென்று யோசனை கேட்பதா?

    35 வயது : அவருக்கு ஏதோ கொஞ்சம் தெரியும்...

    40 வயது : அவர் என்ன நினைக்கிறார்? என்பதை கேட்பதில் தப்பில்லையே...

    45 வயது : அவரின் யோசனையை கேட்டு முடிவெடுக்கலாமே...

    50 வயது : என் தந்தை இது போன்ற விஷயங்களில் எப்படி முடிவு எடுப்பார் தெரியுமா?

    55 வயது : அவர் இல்லாதது உண்மையிலேயே பெரிய கஷ்டமாக இருக்கிறது.

    60 வயது : அவருடைய அறிவும், அனுபவமும் எங்கே? நான் எங்கே?
    ---------------------------------------------------------------------------------------------------


    இது எப்படி இருக்கு?
    வாழ்க்கை Normal-லா போனா
    வழியில குறுக்க வர்ற
    நாயைக் கூட கண்டுக்காதே...

    வாழ்க்கை Serious-ஆ போனா
    வழியில குறுக்க வர்ற
    சிங்கத்தைக்கூட விட்டுவிடாதே...
    ---------------------------------------------------------------------------------------------------
    ஹா... ஹா... சிரிக்க மட்டுமே...!!
    நாலு வகை சட்னி தினமும் கிடைக்கும்
    என எதிர்பார்ப்பில் ஆரம்பித்து...
    நாலு நாளா ஒரே சட்னியை
    வச்சு சாப்பிடும் எதார்த்தத்திற்கு பெயர்தான் திருமணம்...
    ---------------------------------------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!
    படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
    நடுவன்மை நாணு பவர்.

    விளக்கம் :

    பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணி பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக