Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 17 மார்ச், 2020

கொரோனாவால் நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேக்கம்.!

 
பிராய்லர் கோழி மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது.எனவே  யாரும் கோழி இறைச்சியை சாப்பிட வேண்டாம் என சில மர்ம நபர்கள் சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மேலும்  முட்டை, கோழி இறைச்சியை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். அதனால் முட்டை, கோழி விலை படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் உள்ள 1100 கோழிப்பண்ணைகள் மூலம் தினமும்  4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு சத்துணவு மையம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுகிறது.
இந்நிலையில் கொரோனோ வைரஸ்,கேரளாவில் ஏற்பட்ட பறவை காய்ச்சல் காரணமாக முட்டை விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் கோழிப் பண்ணையாளர்கள் வருத்த்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக