>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 6 ஏப்ரல், 2020

    உங்களின் மிக முக்கியமான மூலதனம்... படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

    சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
    நீதிபதி : நகையை திருடுனதுக்கு உன் மேல தொடரப்பட்ட வழக்குல நீ குற்றவாளி இல்லன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்.
    குற்றவாளி : அப்படீன்னா திருடிய நகையை நானே வெச்சுக்கட்டுமா சாமி?
    நீதிபதி : 😠😠
    ---------------------------------------------------------------------
    மகன் : அப்பா... எனக்கு செல்போன் வேணும்பா...
    அப்பா : படிக்கிற வயசுல உனக்கு எதுக்குடா செல்போன் வாங்கித் தரணும்?
    மகன் : சரி, அப்ப நான் படிக்கல. செல்போன் வாங்கிக் கொடுங்க.
    அப்பா : 😏😏
    ---------------------------------------------------------------------
    லதா : அந்த சயின்டிஸ்ட் கூட ஓடிப்போனியே ஏன் டி திரும்ப வந்துட்ட?
    கீதா : அவன், அதை சோதனை ஓட்டம்னு சொல்லிட்டான்டி..
    லதா : 😂😂
    ---------------------------------------------------------------------
    நகுல் : வித்தியாசமா இருக்கட்டுமேன்னு, போர்டுக்கு பதிலா டீ-சர்ட்ல Tolet-னு எழுதி வாசல்ல தொங்க விட்டது தப்பாப்போச்சு.
    தாமு : ஏன், என்னாச்சு?
    நகுல் : எவனோ ஒருத்தன் அந்த டீ-சர்ட்டை எடுத்துக்கிட்டு, அதுக்கு பதிலா அவனோட அழுக்கு பனியன்ல Thanks-னு எழுதி மாட்டிட்டுப் போயிட்டான்.
    தாமு : 😇😇
    ---------------------------------------------------------------------
    சிறந்த வரிகள்...!!
    🌟 அறிவு என்பது சிறகைப் போன்றது. அந்த சிறகைக் கொண்டு நாம் சொர்க்கத்திற்கே பறந்து செல்லலாம்.

    🌟 அவசரத்தால்தான் தவறுகள் உண்டாகின்றன. எதையும் நிதானமாக செய்வதன் மூலம் எந்த சமயத்திலும் அது உண்டாவதில்லை.

    🌟 காலம்... விலைக்குக் கிட்டாது. விரும்பியும் திரும்பாது.

    🌟 அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டு வரும்.

    🌟 எளிமையாக இருங்கள். எளிமைதான் உண்மையாக வாழ கற்றுக்கொடுக்கும். மாபெரும் கண்டுபிடிப்புகளுக்கு தேவையான அறிவைத் தரும் சாவி எளிமையில்தான் அடங்கி இருக்கிறது.
    ---------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
    தழுக்கா றிலாத இயல்பு.

    விளக்கம் :

    ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்குரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.
    ---------------------------------------------------------------------
    படித்ததில் பிடித்தது...!!

    கோபம் கொள்வது எந்த மனிதனும் செய்யக்கூடிய எளிய செயல்...
    ஆனால் சரியான நேரத்தில், சரியான நபரிடம், சரியான காரணத்திற்காக
    கோபப்படுவது எளிய செயல் அல்ல...



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக