>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 6 ஏப்ரல், 2020

    அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத குபேரலிங்கேஸ்வரர் திருக்கோயில்,

    மூலவர் : குபேரலிங்கேஸ்வரர்
    உற்சவர் : குபேரலிங்கேஸ்வரர்
    அம்மன்/தாயார் :  சொர்ணாம்பிகை
    தல விருட்சம் :  வில்வம், நாகலிங்கம் 
    தீர்த்தம் : -
    ஆகமம்/பூஜை : சைவம் 
    பழமை : 500 வருடங்களுக்குள்
    புராண பெயர் :
    ஊர் : திண்டுக்கல்
    மாவட்டம் : திண்டுக்கல்
    மாநிலம் :  தமிழ்நாடு

     பாடியவர்கள்:
       
     
       
      திருவிழா:
       
       மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், மாத பவுர்ணமி, பிரதோஷம் 
       
      தல சிறப்பு:
       
      மூலவர் குபேரலிங்கேஸ்வரர் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு. இத்தகைய மேற்கு பார்த்த சிவனை தரிசிப்பது ஆயிரம் சிவாலயங்களை தரிசித்த பலனை தரும் என்பது சிறப்பு. 
       
     திறக்கும் நேரம்:
       
      காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
       
     முகவரி:
       
      அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத குபேரலிங்கேஸ்வரர் திருக்கோயில், வி.ஐ.பி. நகர், ஆர். எம் காலனி, 7வது கிராஸ்ரோடு, திண்டுக்கல் 624001 
       
     போன்:
       
      +91 94431-75569 
       
      பொது தகவல்:
       
        மேற்கு பார்த்து கோயில் அமைந்துள்ளது. மூன்று நிலை மூன்று கலசத்துடன் மேற்கு பார்த்து ராஜ கோபுரம் அமைந்துள்ளது.  வள்ளி தெய்வானையுடன் முருகன், துர்க்கை, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, கொடிமரம் இங்குள்ளது. பதிணென் சித்தர்கள் உருவம் கோயிலின் உப்புறம் வரையப்பட்டுள்ளது. 
       

     பிரார்த்தனை
       
      வேலை வாய்ப்பு கிடைக்கவும், திருமணத்தடை நீங்கவும், சகல சவுபாக்கியங்கள்  பெறவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

       
     நேர்த்திக்கடன்:
       
      பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர். 
       
      தலபெருமை:
       
      கோயில் கோபுர சிறப்பு. சிவதிசையில் உள்ளது சிவன், ராமருக்கு காட்சி கொடுத்த சிற்பம் உள்ளது. ஈஸ்வர திசையில் உள்ளபடி, சனகாதிபதி முனிவர்கள் நால்வருக்கு பிரம்மத்தை போதித்த சிவன் மயூரி தாண்டவர் (சிவன், சக்தி) அதிகார நந்தி மத்தளம் அடிக்கும் காட்சி இங்கு காணலாம். 
       
        தல வரலாறு:
       
      எட்டு ஆண்டுகளாக திண்டுக்கல் ஆர். எம். காலனி பக்தர்கள் வழிபடும் கோயில்களுள் ஒன்று. இங்குள்ள சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் முன், திண்டுக்கல்லில் வெள்ளம் ஒன்று வந்து வெள்ள நீரில் 48 மணிநேரம் சுவாமி நீரில் இருந்தார். இக்கோயிலில் மவுனத்திற்கு மட்டுமே முக்கியத்துவம். இறைவனிடம் மன தூய்மையுடன் தங்களது குறைகளை பக்தர்கள்கூறி சிறந்த பலனடைந்ததாக,கூறுகின்றனர்.

       
     சிறப்பம்சம்:
       
      அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் குபேரலிங்கேஸ்வரர் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு. இத்தகைய மேற்கு பார்த்த சிவனை தரிசிப்பது ஆயிரம் சிவாலயங்களை தரிசித்த பலனை தரும் என்பது சிறப்பு.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக