
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 16 காதி உற்பத்தி நிறுவனங்களில் இந்த லாக்டவுன் சமயத்திலும் மாஸ்க் தயாரிப்பதற்கான ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு மாஸ்க் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதுகுறித்து விளக்கமாக இங்கு பார்க்கலாம்.
கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவுதலைத் தடுப்பதற்காக தங்களுடைய மாநிலத்திலிருந்து போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதில் ஒன்று தான் இந்த மாஸ்க் உற்பத்தி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு காதியில் தயாரிக்கப்படும் மாஸ்க்குகள் N95 மாஸக்குகள் போன்றோ அல்லது சர்ஜிக்கல் மாஸ்க் போன்றோ அல்ல. இவை காதி ஃபேப்ரிக்கில் தயாரிக்கப்படும் சாதாரண மாஸ்க்குகள் தான். ஆனால் இவையும் ஒருவித குறைந்தபட்ச பாதுகாப்பை நமக்கு அளிக்கக் கூடியவை என்பதால், ஓரளவுக்கு பாதுகாப்பானதாகவும் உதவிகரமாகவும் இருக்கும். குறிப்பாக, ஏதேனும் இடத்தைத் தொட்டுவிட்டு, உங்கள் கைகளை முகத்தில் வைக்காமல் இருப்பது, யாரேனும் தும்மினாலோ அல்லது கிருமிகள் இருக்கும் நீர்த்துளிகள் முகத்தில், சுவாசப் பாதை வழியே செல்லாமலும் தடுக்கப் பயன்படும்.
இந்த காதி மாஸ்க்குகளில் இருக்கும் இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால், இவற்றை துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும். தற்சமயம் மெடிக்கல் கிரேடு மாஸ்க்குகள் கிடைப்பதில்லை. உண்மையிலேயே யாருக்குத் தேவையோ அங்கு மட்டும் சப்ளை செய்யப்படுகின்றன. குறிப்பாக, மருத்துவமனைகள், மருத்துவர்கள் போன்ற தேவைப்படும் இடங்களில் மட்டும் அந்த மாஸ்க்குகள் கிடைக்கின்றன. அதனால் மற்ற இடங்களில் பெரும்பாலும் ஃபேப்ரிக் மாஸ்க்குகளே பயன்படுத்தப்படுகின்றன.
இந்த காதி மாஸ்க்குகளின் விலை ஒன்று 18 ரூபாய். இலவசமதகவும் தேவைப்படும் இடங்களில் வழங்கப்படுகிறது. லாக்டவுன் காலகட்டமான இப்போது, மாஸ்க் தயாரிப்பதற்கான உற்பத்தி பிரிவு மட்டும் இயங்கி வருகிறது. மாநிலத்தின் தேவையைத் தாண்டி, பாதிக்கப்பட்டிருக்கின்ற மற்ற இடங்களுக்கும் மாஸ்க் தயாரித்து அனுப்பும் திட்டம் இருப்பதாக அந்நிறுவனத் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக