Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

நீங்கள் ஆறா? இல்லை சிற்றோடையா? யோசித்து பாருங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

இது சிரிப்பதற்கான நேரம்...!!
ராணி : ஹலோ... அறிவழகியா?
ஜானகி : இல்ல... நா அவங்க அம்மா பேசுறேன்...
ராணி : அறிவு இருந்தா அவக்கிட்ட போன கொடுங்க...
ஜானகி : 😳😳
------------------------------------------------------------
அப்பா : ஏன்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே... என்னாச்சு?
மகன் : அட அத ஏன்பா கேக்குறீங்க...?
அப்பா : ஏன்டா?
மகன் : எல்லோரும் என்ன பாத்து பயந்துக்கிட்டு முன்னாடியே போயிட்டாங்க...
அப்பா : 😂😂
------------------------------------------------------------
குட்டி பொண்ணு : அணிலுக்கும், ஆமைக்கும் லெட்டர் போட்டா மொதல்ல எதுக்கு போயி சேரும்?
ராதிகா : தெரியலையே பாப்பா...
குட்டி பொண்ணு : அணிலுக்குத்தான்...
ராதிகா : ஏன்?
குட்டி பொண்ணு : ஏன்னா அதுக்குத்தான் பின்கோடு இருக்கே...
ராதிகா : 😏😏
------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!

எந்த பறவை தனியாக பறக்கின்றதோ அதற்குதான்
மிக வலுவான சிறகுகள் இருக்கும்.
எனவே உலகமே எதிர்த்து நின்றாலும்
உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யுங்கள்...
------------------------------------------------------------
இது உண்மையா?

பணக்காரன் ஏழை வீட்டிற்கு சென்றால் உபசரிப்பு பலமாக இருக்கும்!

ஏழை பணக்காரன் வீட்டிற்கு சென்றால் உபதேசம் மட்டுமே இருக்கும்!
------------------------------------------------------------
இதில் நீங்கள் யார்?

சிற்றோடைகள் மலைகளில் மோதியும்,
பிளவில் விழுந்தும் பெருஞ்சத்தத்தை எழுப்பும்...

ஆறோ அமைதியாகப் பயணிக்கும்...
முட்டாள் சிற்றோடையை போன்றவன்
ஆனால் அறிவுடையவன் அமைதியான
நதியைப் போன்றவன்!!
------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

விளக்கம் :

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவருக்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களை சொல்லுதல் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக