Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

ஆசைக்கும், அன்புக்கும் அடிமையாகாதீர்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!

சிரிக்கலாம் வாங்க...!!

மாலா : வணக்கம் டாக்டர்... உங்க வைத்தியத்தால எனக்கு பெரிய நன்மை நடந்துச்சு.
ராதா : நான் உங்களுக்கு வைத்தியம் பாக்கவே இல்லையே?
மாலா : என் மாமாவுக்கு பாத்தீங்க... பலன், அவர் சொத்து முழுசும் எனக்கு கிடைச்சிருச்சு.
ராதா : 😳😳
------------------------------------------------------------
பாபு : திருப்பதி மலைக்கு போய் சாமி கும்பிட்ட பிறகு என்ன செய்யணும்?
குமார் : பொறுமையா கீழே இறங்கணும்.
பாபு : 😠😠
------------------------------------------------------------
குணா : எனக்காக நீ இருக்கன்னு எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா பொறக்கும் போது கூட நான் அழுதிருக்க மாட்டேன் மச்சி.
பிரவீன் : விடு டா, ஃபீல் பண்ணாத.
குணா : இல்ல மச்சி. அவ்ளோ பெரிய காமெடி பீசு டா நீ, உனக்கு தெரியாது.
பிரவீன் : 😬😬
------------------------------------------------------------
தாரா : என் கணவருக்கு டெம்பரேச்சர் பாக்கறதுக்கு, என்னை எதுக்கு டாக்டர் வெளியே போகச் சொல்றீங்க...?
டாக்டர் : அப்பத்தானே தர்மாமீட்டர் வெக்கறதுக்கு அவர் வாயைத் திறப்பாரு.
தாரா : 😜😜
------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!

🌟 நேரத்தை வீணாக தள்ளிப்போடாதே... தாமதங்கள் அபாயகரமான முடிவைக் கொண்டுள்ளன.

🌟 புரியாத வார்த்தை இருந்தும் பயனில்லை... புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயனில்லை....

🌟 அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை.

🌟 ஆசைக்கும், அன்புக்கும் அடிமையாகாதீர்கள்... ஏனெனில் இரண்டுமே உங்களை அடிமையாக்கிவிடும்.
------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

விளக்கம் :

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக