Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 4 மே, 2020

9-ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

அங்காரகன் நவகிரகங்களில் மூன்றாவதாக குறிப்பிடப்படுபவர். பரத்வாஜ முனிவரின் மகனாகப் பிறந்து பூமாதேவியால் வளர்க்கப்பட்டதால் அங்ககாரகன் என்றும், அதுவே சுருக்கமாக அங்காரகன் என்றும் கூறப்படுகிறது.

ஜாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்திருந்தால், அங்காரகன் கடன் தொல்லையின்றி, செல்வத்தையும், வாகன யோகம் மற்றும் புகழையும் அள்ளிக்கொடுப்பார்.

ஜோதிடத்தின் படி செவ்வாய் பகவான், மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

லக்னத்தில் 9-ம் இடத்தில் செவ்வாய் நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு நிலமும், பொருளும் விரயமாகும்.

9ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

👉 உயர்ந்த பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

👉 செயல்பாடுகளில் வேகம் நிறைந்தவர்கள்.

👉 கடினமான மனநிலையை உடையவர்கள்.

👉 கலைகளின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.

👉 தொழில் நுணுக்கம் அறிந்தவர்கள்.

👉 சுயநலமான சிந்தனைகளை உடையவர்கள்.

👉 வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும்.

👉 எதிலும் லாப நோக்கத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

👉 தந்தையிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

👉 அன்பு மற்றும் பாச உணர்வுகள் குறைவு.

👉 பிடிவாத குணம் கொண்டவர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக