>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 13 மே, 2020

    முயற்சியா? முடிவா? உலகம் இதில் எதை எதிர்பார்க்கும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    இது சிரிக்க மட்டுமே..!!

    கணவன் : ஹலோ... டார்லிங், இன்னைக்கு வீட்டுக்கு வரமுடியாது.
    மனைவி : ஏன்?
    கணவன் : கார்ல எவனோ ஸ்டியரிங், ஆக்ஸிலரேட்டார், க்ளட்ச், பிரேக் எல்லாத்தையும் திருடிட்டு போயிட்டான்.
    மனைவி : தண்ணியடிச்சிருக்கீங்களா?
    கணவன் : கொஞ்சம் லைட்டா அடிச்சிருக்கேன்.
    மனைவி : முதல்ல பின் சீட்ல இருந்து முன் சீட்ல போய் உட்கார்ந்து காரை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வாங்க..
    கணவன் : 😬😬
    ----------------------------------------------------------------
    சீலா : என் கணவர் இருக்கிற இடத்துல பணத்துக்கு குறைவே இருக்காது...
    திவ்யா : நிஜமாவா? அப்படி எங்க இருக்காரு?
    சீலா : ஏடிஎம் வாட்ச்மென்-ஆ இருக்காரு...
    திவ்யா : 😝😝
    ----------------------------------------------------------------
    ஆசிரியர் : நான் உடயளள எடுத்துக்கிட்டு இருக்கும்போது நீங்க பேசுனதுக்கு தண்டனையா உங்க பேர 200 தடவ எழுதுங்க...
    மாணவன் : சார்... ரெண்டு பேருக்கும் ஒரே தண்டனையா தராம எனக்கு மட்டும் அதிகமா கொடுத்துருக்கீங்க...
    ஆசிரியர் : ரெண்டு பேருக்கும் ஒரே தண்டனைய தான கொடுத்துருக்கேன்?...
    மாணவன் : இல்லை சார்... அவன் பெயர் ரவி... என் பெயர் வேங்கட சுப்பிரமணிய கோபால கிருஷ்ணன்...
    ஆசிரியர் : 😳😳
    ----------------------------------------------------------------
    முயற்சியா? முடிவா?

    சிறையில் வாழ்வதும்...
    சிறகடித்து பறப்பதும்
    உன் கையில்தான் உள்ளது..
    முயற்சிகளை விட,
    முடிவுகளை எதிர்பார்க்கும் உலகம் இது..
    ----------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
    கோடாமை சான்றோர்க் கணி.

    விளக்கம் :

    முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுநி‌லைமை போற்றுவது சான்றோருக்கு அழகாகும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக