Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 15 மே, 2020

மூடப்பட்ட டாஸ்மாக்.! திறக்கப்பட்ட கள்ளுக்கடைகள்.! காலியான சரக்கு பாட்டில்கள்.!

ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் இல்லாததால், உள்ளூர் மதுபானமான கள் விற்பனை கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 50 நாட்களாக கேரளாவில் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்து வருகின்றன. வரும் 18ஆம் தேதி முதலாவது மதுக்கடைகள் திறக்கப்படுமா என மதுபிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நேரத்தில், கேரளாவில் 11 மாவட்டங்களில் நேற்று முதல் கள்ளுக்கடை திறக்கப்பட்டுள்ளது. 

திருவனந்தபுரம், கொல்லம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களை தவிர 11 மாவட்டங்களில் கள்ளுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கள்ளுக்கடையில் பார்சல் மட்டுமே வழங்கப்படும். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 1.5 லிட்டர் மட்டுமே வழங்கபடும் என நிபந்தனைகளோடு கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை வாங்குவதற்கு மதுபிரியர்கள் ஆவலுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!