Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 5 மே, 2020

ola, uber சேவை தொடக்கம்: ஏசி ஆஃப், 2 பேர் மட்டும் அனுமதி, டிரைவரோடு ஒரு செல்பி, இன்னும் பல,

ஓலா, உபர் சேவை தொடங்கப்பட்டுள்ளது சில வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. ஓலா, உபர் சேவையானது ஆரஞ்ச், பச்சை அலர்ட் உள்ள பகுதிகளில் மட்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உபர் விதக்கப்பட்ட விதிகள்

சேவை தொடங்கப்பட்டது குறித்து உபர் தெரிவிக்கையில், கார் அல்லது ஆட்டோ என எது புக் செய்தாலும் அதில் சமூக இடைவெளிவிட்டு அமர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டு பேருக்கு மேல் பயணிப்பதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும்

அதேபோல் 65 மேல் உள்ள முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு உட்பட்டோர்கள் வெளியே வராமல் வீட்டிலேயே இருக்கும்படி உபர் சார்பில் அறிவுறத்தப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து எடுத்து வருகிறது. இருப்பினும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும் என்பது பிரதான உண்மையாகும்.

ஓலா, தனது இணையதளத்தில் தெரிவித்துள்ள விதிகள்

இது குறித்து ஓலா, தனது இணையதளத்தில் கூறியுள்ளதாவது, நாட்டின் 100 க்கும் மேற்பட்ட நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது, அங்கு மீண்டும் சேவைகளைத் தொடங்கும் என அறிவித்துள்ளது. ஓலா கேப்ஸ், ஓலா ஆட்டோ மற்றும் ஓலா பைக் திங்கள் முதல் அந்த பகுதிகளில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. டெல்லியில் ஓலாவின் சேவைகள் குர்கான் மற்றும் காசியாபாத்தில் கிடைக்கும்.

பாதுகாப்பைப் பொறுத்தவரை

ஓலா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கான பயணங்களை இடைநிறுத்தியுள்ளது. அனைத்து ஓட்டுநர்களும் முகமூடிகள், கிருமிநாசினிகள் பயன்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் எல்லா நேரங்களிலும் முகமூடிகளை அணிய வேண்டும், ஒவ்வொரு சவாரிக்கு முன்னும் பின்னும் வண்டிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் பிறதரப்பினர் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றவில்லை எனக் கண்டால் பயணிகள் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும் சவாரியை ரத்து செய்வதற்கான விருப்பங்கள் காண்பிக்கப்படும்.

ஓட்டுநர் மற்றும் பயணிகள் பாதுகாப்பு

இது தவிர, ஓட்டுநர் மற்றும் பயணிகள் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த, அவர்கள் உண்மையில் முகமூடிகளை அணிந்திருக்கிறார்களா என்பதை சரிபார்க்கும் பயன்பாட்டின் மூலம் ஒரு செல்ஃபி எடுத்து பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சவாரிக்கு முன்னும் பின்னும் வாகனத்தை சுத்திகரிக்க வேண்டும்

பயணிகள் முகமூடி அணிவதும், சவாரிக்கு முன்னும் பின்னும் வாகனத்தை சுத்திகரிப்பதும் நிறுவனம் கட்டாயமாக்கியுள்ளது. அதேபோல் ஏ.சி.க்கள் அணைக்கப்படும் மற்றும் காற்று போக்கு இருக்கும் வகையில் அனைத்து ஜன்னல்களும் திறந்தபடியே இருக்க வேண்டும். அதே சமூக இடைவெளியை கடைபிடித்தே அனைத்து நடவடிக்கைகளும் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!